கார் பேனட்டில் ஒருவர் அலறியபடி இருக்க, பெண் ஒருவர் காரை நிறுத்தாமல் ஓட்டிச் சென்ற சம்பவம் பெங்களூரூவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானபாரதி மெயின் ரோட்டில் தர்ஷன் என்பவரின் கார் மீது, பிரியங்கா என்ற பெண் ஓட்டி வந்த கார் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால், தர்ஷன் காரில் இருந்து இறங்கி வந்து பார்த்துள்ளார்.
பின்னர், காரில் இருந்தவர்களிடம் பேச அவர் முயன்ற போது, பிரியங்கா அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. ஓடிவிடலாம் என்ற பயத்தில் தர்ஷன் வேகமாக குதித்து காரின் பானெட்டில் ஏறினார் என்று கூறப்படுகிறது.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு காரின் பானெட்டில் படுத்தபடி உயிரை காப்பாற்றிக் கொள்ள கூச்சலிட்டுள்ளார். இதைக் கண்ட வாகன ஓட்டிகள், அந்தக் காரை சத்தம் போட்டவாறே துரத்திச் சென்று மடக்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதையடுத்து, காரை ஓட்டிச்சென்ற அந்த பெண், அவரது கணவர் மற்றும் மேலும் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெங்களூரூவில் 71 வயது முதியவரை இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.