திருமணத்திற்கு மறுத்த பெண்ணை காதலன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகவின் முருகேஷ்பால்யா பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் லீலா என்ற எம்.எஸ்.சி பட்டதாரி பெண் பணியாற்றி வந்தார். இதேபோல, மற்றொரு தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தினகர். இவரும், லீலாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினகரை காதலிப்பது தொடர்பாக லீலா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, சாதியை காரணம் காட்டி அவர்கள் இருவரின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த தினகர், நேற்று மாலை 7.30 மணியளவில், வழக்கம் போல் பணி முடித்து வெளியே வந்த லீலாவை, தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து, மார்பு, வயிறு என சரமாரியாக குத்தியதால் லீலா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதையடுத்து, தினகர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் லீலா உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.