திருமணத்திற்கு மறுத்த பெண்ணை காதலன் கொடூரமாக குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகவின் முருகேஷ்பால்யா பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் லீலா என்ற எம்.எஸ்.சி பட்டதாரி பெண் பணியாற்றி வந்தார். இதேபோல, மற்றொரு தனியார் ஹெல்த்கேர் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் தினகர். இவரும், லீலாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், தினகரை காதலிப்பது தொடர்பாக லீலா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அப்போது, சாதியை காரணம் காட்டி அவர்கள் இருவரின் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆவேசம் அடைந்த தினகர், நேற்று மாலை 7.30 மணியளவில், வழக்கம் போல் பணி முடித்து வெளியே வந்த லீலாவை, தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். கழுத்து, மார்பு, வயிறு என சரமாரியாக குத்தியதால் லீலா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதையடுத்து, தினகர் அங்கிருந்து தப்பி ஓடினார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் லீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் லீலா உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்துக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையும் படியுங்க:…
சோகத்தில் சென்னை ரசிகர்கள் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. 43…
திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா, தா.பேட்டை அடுத்த வாளசிராமணி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (43) டிப்ளமோ டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் படித்துவிட்டு…
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
This website uses cookies.