பீகார் : பீகாரில் இளைஞர் ஒருவரை ஓடும் ரயிலின் ஜன்னலில் 15 கி.மீ. தொங்கவிட்டபடி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் – கட்டிஹார் பயணிகள் ரயிலில் ஏராளாமானோர் பயணம் செய்து கொண்டிருந்தனர். பெகுஷாராய் பகுதியில் உள்ள நிறுத்தத்தில் இருந்து ரயில் புறப்படும் போது, பயணி ஒருவரின் செல்போனை திருடன் பறித்துச் செல்ல முயன்றுள்ளார்.
அப்போது, அந்த நபரை கையும் களவுமாக பிடித்த பயணிகள், ஓடும் ரயிலில் ஜன்னலுக்கு வெளியே தொங்கவிட்டபடி, அந்த நபரை சுமார் 15 கி.மீ.க்கு ஆபத்தான முறையில் அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள காவல்நிலையம் ஒன்றில் அந்த நபரை ஒப்படைத்துள்ளனர்.
இதனிடையே, ஒடும் ரயிலின் ஜன்னலில் அந்த நபரை தொங்கவிட்டபடி செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அந்த நபர் வலி தாங்க முடியாமல், கெஞ்சும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.