உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த முறை இழந்த 14 எம்.பி. தொகுதிகளில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. தீவிரம் காட்டி, உத்தி வகுக்கிறது. 4 மத்திய அமைச்சர்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்தத் தேர்தலில் வென்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியில் அமர்வதற்கான வியூகங்களை பா.ஜ.க. வகுத்து வருகிறது.
மேலும், தேர்தலுக்கான களப்பணிகளில், மத்தியில் ஆளும் பா.ஜ.க. இப்போதே தீவிரம் காட்டத்தொடங்கி விட்டது. நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தின் 80 எம்.பி. தொகுதிகளில் பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உருவாகும் என்பதால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க. தனிக்கவனம் செலுத்த விரும்புகிறது.
கடந்த 2019 தேர்தலில் அங்கு 14 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி வாய்ப்பை இழந்தது. அந்த தொகுதிகள், பிஜ்னோர், அம்ரோஹா, மொரதாபாத், சம்பல், ரேபரேலி, கோசி, லால்கஞ்ச், ஜான்பூர், அம்பேத்கர்நகர், காசிப்பூர், சிரேவஸ்தி, மெயின்புரி, சஹாரன்பூர், நாஜினா ஆகும்.
பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் இவற்றில் ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வென்றதாகும்.
சமாஜ்வாடி கட்சி, மெயின்புரி, சம்பல் உள்ளிட்ட 5 தொகுதிகளில் வென்றது. பகுஜன் சமாஜ் கட்சி 10 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் இந்த மாநிலத்தில், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய லோக்தளம் கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன.
பா.ஜ.க., அப்னாதளத்துடன் இணைந்து போட்டியிட்டு 64 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் இடைத்தேர்தல் மூலம் அசம்கார், ராம்பூர் தொகுதிகளை வென்றது.
இந்த நிலையில், கடந்த முறை வெற்றி பெறத்தவறிய 14 எம்.பி. தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற தீவிரம் காட்டுகிறது. அதற்கான உத்தி வகுத்து வருகிறது.
இந்த தொகுதிகளில் உத்தி வகுத்து வெற்றி பெறுவதற்கான பொறுப்பு 4 மத்திய மந்திரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.