ஆந்திரா : பிரதமரின் ஆந்திர பயணத்தின் போது பாதுகாப்பு குளறுபடி ஏற்படும் விதமாக காங்கிரசார் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹைதராபாத் சமீபத்தில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் இரண்டு நாட்களாக கலந்து கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திராவிற்கு வந்தார்.
விஜயவாடா அருகில் உள்ள கண்ணவரம் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்த அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பீமவரம் சென்று அல்லூரி சீதாராமராஜூ பிறந்தநாள் விழாவில் பங்கேற்றார்.
கன்னவரம் விமான நிலையம் அருகில் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பறக்கவிட்ட கருப்பு பலூன்கள் பிரதமர், ஆந்திர முதல்வர் ஆகியோர் பயணித்த ஹெலிகாப்டர் கான்வாய் பாதையில் சென்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த செயல் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் நடத்தப்பட்ட பெரும் குளறுபடியாக கருதப்படுகிறது.
எனவே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் இது பற்றி விசாரணை நடத்துவார்கள் என்று ஆந்திர பாஜக தலைவர் சோமுவீர ராஜு கூறியுள்ளார்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.