மகாராஷ்டிரா ; பார்வையற்ற பெற்றோருக்கு தினமும் உணவு வாங்கி கொடுத்து, வீட்டுக்கு அழைத்து செல்லும் சிறுமியின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
மகாராஷ்டிராவில் மும்பை நகரில் உள்ள மீரா சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்திற்கு சிறுமி ஒருவர் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவர் தன்னுடன், பார்வையற்ற பெற்றோரையும் அழைத்து வருகிறார். அவர்களுக்கு உணவு வாங்கி தருவதுடன், அதனை சாப்பிடவும் செய்ய வைத்த மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்கிறார்.
தினமும் நடக்கும் இந்த நிகழ்வை கண்காணித்த நபர் ஒருவர், அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், முதன்முறையாக அவர்களை பார்த்தபோது உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். ஒவ்வொரு நாளும் அவர்கள் இந்த உணவகத்திற்கு வருகின்றனர். பெற்றோர் பார்வையற்றவர்கள்.
ஆனால் அவர்களது மகளின் கண்கள் வழியே இந்த உலகை அவர்கள் பார்க்கின்றனர். இந்த சிறுமி பல விசயங்களை நமக்கு கற்று தருகிறார். உங்களது பெற்றோரை விட உங்களை வேறு யாரும் நன்றாக கவனிக்க முடியாது. அதனால், உங்களை விட்டு செல்லும் முன்பு அவர்களை நீங்கள் நன்றாக கவனித்து கொள்ளுங்கள், என அந்த நபர் பதிவிட்டு உள்ளார்.
இந்த வீடியோவை லட்சக்கணக்கானோர் பார்வையிட்டு, கமெண்ட்ஸ்களை பதிவிட்ட வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.