சந்திரபாபு நாயுடு பயணித்த படகு கோதாவரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் ஒரு நிமிட இடைவெளியில் விபத்தில் இருந்து தப்பினார்.
மகாராஷ்டிராவில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் கோதாவரி நதி கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நிவாரண உதவி வழங்குவதற்காக சந்திரபாபு நாயுடு கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் கோதாவரி நதியில் படகுமூலம் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு இன்று மாலை பயணித்தார்.
கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோம்பல்லி கிராமத்தை அவர் பயணித்த படகு அடைந்த நிலையில் சந்திரபாபு நாயுடு படகில் இருந்து இறங்கினார். இந்த நிலையில் படகு ஒரு பக்கமாக சாய்ந்து அதிலிருந்து கட்சியின் முக்கிய பிரமுகர்கள் தண்ணீரில் விழுந்தனர்.
இதனை கவனித்த அந்த கிராம மீனவர்கள், சந்திரபாபு நாயுடு பாதுகாப்பு படையினர் ஆகியோர் ஆற்றில் குறித்து அவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர்.
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
திமுகவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் பொன்முடி. இவர் மீது ஏராளமான சர்ச்சைகள் உள்ளது. இவர் பேசும் பேச்சு எப்போதும் சர்ச்சையை…
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
This website uses cookies.