ஆளும் கட்சி சட்ட மேலவை உறுப்பினர் காரில் முன்னாள் கார் ஓட்டுனர் சடலம் மீட்கப்பட்ட நிலையில் கொலை செய்துள்ளதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் அனந்தபாபு. ஆனந்தபாபு ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் சட்ட மேலவை உறுப்பினர் (MLC) ஆவார்.
அவரிடம் சுப்பிரமணியம் என்பவர் இதற்கு முன்னர் டிரைவராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வீட்டிற்கு சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு சுப்பிரமணியத்தை தன்னுடைய காரில் அழைத்துச் சென்றார்.
நேற்று நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் சுப்ரமணியம் வீட்டிற்கு வந்த எம்.எல்.சி அனந்தபாபு சாப்பிடுவதற்காக டிபன் வாங்க மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டு சுப்பிரமணியம் இறந்துவிட்டார் என்று கூறி தன்னுடைய காரில் இருந்த சுப்பிரமணியம் உடலை அவருடைய குடும்பத்தாருக்கு காண்பித்தார்.
இதனால் சந்தேகமடைந்த சுப்பிரமணியம் உறவினர்கள் அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கிருந்து தப்பி சென்ற எம்.எல்.சி ஆனந்தபாபு தற்போது தலைமறைவாக இருக்கிறார்.
20 ஆயிரம் ரூபாயை எம்.எல்.சி ஆனந்த்பாபுவிடம் இருந்து சுப்பிரமணியம் கடனாக பெற்றதை அடுத்து கடனை திருப்பி செலுத்த கோரி ஆனந்த் பாபு தொடர்ந்து மிரட்டி வந்த நிலையில் காரில் அழைத்துச் சென்று கொலை செய்ததாக குடும்பத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சுப்பிரமணியம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தபாபுவை தேடி வருகின்றனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.