போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் பெயரில் திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி: வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி அளவிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை சாந்தோமைச் சேர்ந்த இவர், தயாரிப்பாளராகவும், உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் அவரது குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்பே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் திமுகவில் பதவி வகித்து வந்த நிலையில், கட்சியில் இருந்து உட்னடியாக நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கோவையில் தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு : விசாரணையில் திக் திக்!
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று (அக்.25) இரவு ஜாபர் சாதிக் பெயரைக் குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள், திருப்பதி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குழுக்களாக பிரிந்த போலீசார், மிரட்டலுக்கு உள்ளான ஹோட்டல்களுக்கு மோப்பநாய் உதவியுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. எனவே, இது புரளி என போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.