போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக் பெயரில் திருப்பதியில் உள்ள ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பதி: வெளிநாடுகளுக்கு ரூ.2,000 கோடி அளவிலான போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக் என்பவர் கைது செய்யப்பட்டார். சென்னை சாந்தோமைச் சேர்ந்த இவர், தயாரிப்பாளராகவும், உணவுப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலையும் செய்து வந்தார்.
இந்த நிலையில், டெல்லி கைலாஷ் பார்க் பகுதியில் அவரது குடோனில் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அப்போது, வெளிநாடுகளுக்கு போதைப்பொருள் ஏற்றுமதி செய்யப்படுவது தெரிய வந்துள்ளது.
மேலும், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, அங்கிருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். இதன் பின்பே ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார். மேலும், அவர் திமுகவில் பதவி வகித்து வந்த நிலையில், கட்சியில் இருந்து உட்னடியாக நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கோவையில் தனியார் கல்லூரி மாணவர் விடுதியில் இருந்து சடலமாக மீட்பு : விசாரணையில் திக் திக்!
இந்த நிலையில், ஆந்திர மாநிலம், திருப்பதியில் உள்ள சில தனியார் ஹோட்டல்களுக்கு நேற்று (அக்.25) இரவு ஜாபர் சாதிக் பெயரைக் குறிப்பிட்டு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டல் உரிமையாளர்கள், திருப்பதி போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குழுக்களாக பிரிந்த போலீசார், மிரட்டலுக்கு உள்ளான ஹோட்டல்களுக்கு மோப்பநாய் உதவியுடன் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் முடிவில் எந்தவித வெடிகுண்டும் கிடைக்கவில்லை. எனவே, இது புரளி என போலீசார் உறுதிப்படுத்தினர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதா? தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா,தனது சமீபத்திய புகைப்படம் மற்றும் கேப்ஷன் மூலம் சமூக…
This website uses cookies.