திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் மோகன் என்பவர் அவருடைய அண்ணன் மனைவி சுனிதா, சுனிதாவின் இரண்டு குழந்தைகள் ஆன தேவி ஸ்ரீ,நீரஜா ஆகியோரை நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கொலை செய்யப்பட்ட சுனிதாவின் கணவன் தாஸ் ஆசிரியராக வேலை செய்துவரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பி மோகனுக்கு விருப்பமில்லாத பெண் ஒருவரை தாஸ் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
திருமணம் நடைபெற்று ஓராண்டு ஆகிய நிலையில் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். ஆனால் தாஸ் தன் தம்பி, தம்பி மனைவி ஆகியோரை அழைத்து வந்து பெற்றோர், உறவினர் ஆகியோர் முன்னிலையில் சமாதானம் செய்து மீண்டும் ஒன்றாக வசிக்க செய்தார்.
ஆனால் அவர்கள் மீண்டும் பிரிந்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த மோகன் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த அண்ணன் தாஸ் மீது கடும் கோபத்தில் இருந்து இருக்கிறார்.
எனவே அண்ணனை பழிவாங்க முடிவு செய்து அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து அண்ணன் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மூன்று கொலைகள், ஒரு தற்கொலை ஆகியவை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி பல்கலைக்கழக போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மத்திய அரசின் பாதுகாப்பு கொடுப்பதற்காக விஜய்க்கும், பாஜகவுக்கும் எந்த உடன்பாடும் கிடையாது என அண்ணாமலை கூறியுள்ளார். கோயம்புத்தூர்: தமிழக பாஜக…
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
This website uses cookies.