அண்ணியை கொலை செய்த கொளுந்தன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் : விசாரணையில் ஷாக்!

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் மோகன் என்பவர் அவருடைய அண்ணன் மனைவி சுனிதா, சுனிதாவின் இரண்டு குழந்தைகள் ஆன தேவி ஸ்ரீ,நீரஜா ஆகியோரை நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை செய்யப்பட்ட சுனிதாவின் கணவன் தாஸ் ஆசிரியராக வேலை செய்துவரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பி மோகனுக்கு விருப்பமில்லாத பெண் ஒருவரை தாஸ் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணம் நடைபெற்று ஓராண்டு ஆகிய நிலையில் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். ஆனால் தாஸ் தன் தம்பி, தம்பி மனைவி ஆகியோரை அழைத்து வந்து பெற்றோர், உறவினர் ஆகியோர் முன்னிலையில் சமாதானம் செய்து மீண்டும் ஒன்றாக வசிக்க செய்தார்.

ஆனால் அவர்கள் மீண்டும் பிரிந்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த மோகன் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த அண்ணன் தாஸ் மீது கடும் கோபத்தில் இருந்து இருக்கிறார்.

எனவே அண்ணனை பழிவாங்க முடிவு செய்து அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து அண்ணன் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று கொலைகள், ஒரு தற்கொலை ஆகியவை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி பல்கலைக்கழக போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அடுக்கடுக்காய் விழுந்த விக்கெட்…மிரட்டி விட்ட இந்திய பௌலர்கள்…!

திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…

7 hours ago

நான் பார்க்காத பிரச்சனையா..’டிராகன்’ பட இயக்குனருக்கு சிம்பு கொடுத்த தரமான அட்வைஸ்.!

தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…

8 hours ago

கோபத்தில் நடிகர் உன்னிமுகுந் எடுத்த முடிவு…தீயாய் பரவும் வீடியோ..!

ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…

9 hours ago

டிராகன் Vs NEEK பந்தயத்தில் வசூல் வேட்டையை நிகழ்த்தியது யார்.!

வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…

10 hours ago

சண்டக்கோழி படத்தில் நடிக்க மறுத்த நடிகர்கள்…இயக்குனர் லிங்குசாமி ஓபன் டாக்.!

விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…

11 hours ago

IND Vs PAK:வெற்றி யார் பக்கம்…அனல் பறக்கும் ஆட்டத்தை பார்க்க படையெடுக்கும் ரசிகர்கள்.!

அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…

12 hours ago

This website uses cookies.