அண்ணியை கொலை செய்த கொளுந்தன்.. குழந்தைகளையும் விட்டு வைக்காத கொடூரம் : விசாரணையில் ஷாக்!

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அருகே இருக்கும் முனி ரெட்டி நகர் காலனியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் மோகன் என்பவர் அவருடைய அண்ணன் மனைவி சுனிதா, சுனிதாவின் இரண்டு குழந்தைகள் ஆன தேவி ஸ்ரீ,நீரஜா ஆகியோரை நேற்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியால் குத்தி கொலை செய்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொலை செய்யப்பட்ட சுனிதாவின் கணவன் தாஸ் ஆசிரியராக வேலை செய்துவரும் நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தம்பி மோகனுக்கு விருப்பமில்லாத பெண் ஒருவரை தாஸ் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.

திருமணம் நடைபெற்று ஓராண்டு ஆகிய நிலையில் இரண்டு பேரும் பிரிந்து விட்டனர். ஆனால் தாஸ் தன் தம்பி, தம்பி மனைவி ஆகியோரை அழைத்து வந்து பெற்றோர், உறவினர் ஆகியோர் முன்னிலையில் சமாதானம் செய்து மீண்டும் ஒன்றாக வசிக்க செய்தார்.

ஆனால் அவர்கள் மீண்டும் பிரிந்து விட்டனர். இதனால் மனவேதனையில் இருந்த மோகன் தனக்கு விருப்பம் இல்லாத பெண்ணை திருமணம் செய்து வைத்த அண்ணன் தாஸ் மீது கடும் கோபத்தில் இருந்து இருக்கிறார்.

எனவே அண்ணனை பழிவாங்க முடிவு செய்து அவர் வீட்டில் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் புகுந்து அண்ணன் மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் ஆகியோரை கொலை செய்து தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் மோகன் என்று போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று கொலைகள், ஒரு தற்கொலை ஆகியவை பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த திருப்பதி பல்கலைக்கழக போலீசார் நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

மதம் மாறச் சொன்ன அமீர்? பாவனி போட்ட ஒரே ஒரு கண்டிஷன்! இப்படி எல்லாம் நடந்திருக்கா?

பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…

3 hours ago

பெண் ஆசிரியரை செருப்பால் அடித்த கல்லூரி மாணவி.. அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…

3 hours ago

அப்போ எல்லாமே செட்டப்பா? உஷாராக பிளான் போட்ட கமல்ஹாசன்? இதான் விஷயமா?

பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…

4 hours ago

திடீரென வெளியான வீடியோ…அதிர்ச்சியில் உறைந்து போன பிரியா வாரியர்!!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…

4 hours ago

பஸ் கண்டக்டருடன் உல்லாசம்.. ரகசிய வீடியோ : தப்பான சகவாசத்தால் விபரீதம்!

பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…

4 hours ago

ரெட்ரோ படத்தில் வடிவேலு? சீக்ரெட்டை போட்டுடைத்த இயக்குனர்? ஆனா அங்கதான் ஒரு டிவிஸ்ட்!

புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…

5 hours ago

This website uses cookies.