உலகக்கோப்பை செஸ் போட்டியில் 2வது இடம்பிடித்த தமிழக வீரர் பிரக்ஞானந்தாவுக்கு தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரரான கார்ல்சனையே திணறடித்த பிரக்ஞானந்தா இறுதியாக போராடி தோல்வி அடைந்தார். இதனால், உலக கோப்பை செஸ் தொடரில் பிரக்ஞானந்தா 2வது இடம் பிடித்துள்ளார்.
இந்த தொடரில் பிரக்ஞானந்தாவின் திறமையான ஆட்டம் பலராலும் பாராட்டப்பட்டது. விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய இந்தியர் என்ற பெருமையும், இந்தப் போட்டியின் வரலாற்றில் இறுதிச்சுற்றுக்கு வந்த இளம் போட்டியாளா் (18) என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.
இந்த நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு இந்த அளவுக்கு ஊக்கம் கொடுத்த பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எலக்ட்ரிக் காரை பரிசாக அளிப்பதாக பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.
பிரக்ஞானந்தாவின் பெற்றோருக்கு எக்ஸ்யுவி 400 (XUV 400) மின் வாகனத்தை பரிசளிக்கலாம் என நினைக்கிறேன் என குறிப்பிட்டு என்ன சொல்கிறீர்கள்? என மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை X தளத்தில் ஆனந்த் மகேந்திரா டேக் செய்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அந்நிறுவன சிஇஓ, ‘யோசனை வழங்கியதற்கு நன்றி. எக்ஸ்யுவி 400 சிறப்பானதாக இருக்கும். விரைவில் எங்கள் குழு அவர்களை அணுகும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.