காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமையை ரத்து செய்யக்கோரிய தனது மனு மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடக்கோரி பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், பிரிட்டன் அரசாங்கத்திடம் ராகுல் காந்தி சமர்ப்பித்த தகவல்கள் குறித்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ந்தேதி சுப்பிரமணியன் சுவாமி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9-வது பிரிவை ராகுல் காந்தி மீறிவிட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், தனது புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பலமுறை கேள்வி எழுப்பியதாகவும், ஆனால் இதுவரை தனக்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை எனவும் சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த மனு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வரும் வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
CSK அணிக்கு முன்னாள் வீரர் ஸ்ரீகாந்தின் ஆலோசனை ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ்…
This website uses cookies.