நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்துள்ளது.
குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் தராமல் இருப்பதும் அரசியல் ரீதியாக கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்வினை கடுமையாக எழுந்தது
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி வெளியான முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு மராட்டிய மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி உள்ளது. தற்போது மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.
பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணியில் அல்லாத அரசுகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டரிடம் LINK க்ளிக் மூலம் மோசடி.. வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் அபேஸ் : இளையதள கேடிகளுக்கு வலை.!!
நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.