நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ந்தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 4ம் தேதி வெளியிடப்பட்டது. அப்படி வெளியிடப்பட்ட முடிவுகளில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்துள்ளது.
குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை உரிய விளக்கம் தராமல் இருப்பதும் அரசியல் ரீதியாக கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்வினை கடுமையாக எழுந்தது
இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி வெளியான முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு மராட்டிய மாநில அரசு அதிகாரப்பூர்வமாக கடிதம் அனுப்பி உள்ளது. தற்போது மராட்டியத்தில் பா.ஜ.க. மற்றும் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது என்பது குறிப்படத்தக்கது.
பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணியில் அல்லாத அரசுகள் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சி ஆட்சியில் இருக்கும் மாநிலத்திலிருந்தும் எதிர்ப்பு கிளம்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க: இன்ஸ்பெக்டரிடம் LINK க்ளிக் மூலம் மோசடி.. வங்கி கணக்கில் ரூ.2.20 லட்சம் அபேஸ் : இளையதள கேடிகளுக்கு வலை.!!
நீட் தேர்வு முடிவுகளில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் காரணமாக மகாராஷ்டிரா மாநில மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் இருப்பதாக அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹசன் முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
கலவையான விமர்சனம்… எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.