சினிமா பட பாணியில் பெட்ரோல் டேங்கர் லாரியில் கடத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் : 2 பேர் கைது…

ஆந்திரா : ஆந்திராவில் பெட்ரோல் டேங்கர் லாரியில் மறைத்து கடத்தப்பட்ட 2 டன் கஞ்சாடிவை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவின் விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை ஒட்டியிருக்கும் மலைக்கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான அளவில் ஏக்கர் அளவில் கஞ்சா சட்டவிரோத சாகுபடி ஜோராக நடைபெற்று வருகிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் கஞ்சா சப்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற தீவிர முடிவில் இருக்கும் சில மாநிலங்கள் இது தொடர்பாக ஆந்திர மாநில அரசுக்கு அழுத்தம் கொடுத்தன. எனவே மலை பகுதிகள், அடர்ந்த வனப் பகுதிகள் ஆகியவற்றில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள இடங்களை கண்டுபிடித்து அவற்றை அழித்து ஒழிக்கும் பணியில் ஆந்திர போலீசார் ஈடுபட்டனர்.

அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கும் கஞ்சா தோட்டங்களை கண்டுபிடிப்பதற்காக ட்ரோன்களையும் ஆந்திர போலீசார் பயன்படுத்தினர். இதன்மூலம் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டங்கள் அழிக்கப்பட்டன. ஆனாலும் இன்னும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருக்கும் கஞ்சாவை விசாகப்பட்டினம், விஜயநகரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து இந்தியா முழுவதும் சப்ளை செய்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்த பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்றை சிங்கவரப்புகோட்டை அருகே உள்ள சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் மூட்டை மூட்டையாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக லாரி டிரைவர் மற்றும் அதிலிருந்த மற்றொருவர் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்துகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விஜயநகரம் மாவட்டத்திலிருந்து ஹைதராபாத்திற்கு கஞ்சா கடத்தல் நடைபெற்றது தெரியவந்துள்ளது.இதனை அடுத்து அதிலிருந்த சுமார் 2000 கிலோ (2 டன்) எடை கொண்ட கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

KavinKumar

Recent Posts

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

6 minutes ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

17 minutes ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

1 hour ago

எனக்கே கம்பி நீட்டிட்டாங்க, நான் பட்ட பாடு இருக்கே- புலம்பித் தள்ளிய வடிவேலு

வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…

1 hour ago

40 வருடம் சிறை தண்டனை… நீதிமன்றம் போட்ட அதிரடி தீர்ப்பு!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…

2 hours ago

This website uses cookies.