18வது மக்களவை கூட்டத்தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.
நேற்று எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து உரையாற்றினார். நீட் விவகாரம், அக்னிவீர் திட்டம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை முன்வைத்து இருந்தார். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி , குடியரசு தலைவர் உரைக்கு பதிலுரை அளித்து வருகிறார். ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் பிரதமர் மோடி.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கடும் அமளிக்கு நடுவிலும் பிரதமர் மோடி தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தினார். அவர் கூறுகையில், கடந்த 3 மக்களவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி 100ஐ கூட தொட முடியாமல் இருந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என மக்கள் தீர்மானித்து விட்டனர்.
எதிர்க்கட்சியினர் தாங்கள் வெற்றி பெற்றது போல நினைத்துக்கொள்கின்றனர். மத்தியில் மட்டுமல்ல மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சியை பிடித்துள்ளோம். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் ஆட்சியில் உள்ளோம்.
அருணாச்சல பிரதேசம் , ஆந்திரா , ஒடிசாவில் எங்கள் கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. கேரளாவில் கூட ஒரு சீட் வெற்றி பெற்று அம்மாநிலத்தில் எங்கள் வெற்றி கணக்கை தொடங்கி விட்டோம். இனிவரும் தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம்.
மகாராஷ்டிரா , ஹரியானா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்களிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையிலும் பிரதமர் மோடி தனது உரையை ஆற்றி வருகிறார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.