தெலுங்கானா : சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த குடிசைக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 4 பெண்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம் நகரின் புறநகர் பகுதியில் சாலையோரத்தில் குடிசை அமைத்து வசித்து வந்த கூலி தொழிலாளர் குடும்பத்தினர் வழக்கம் போல் நேற்று இரவும் தங்கள் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
இன்று காலை சுமார் ஐந்தரை மணி அளவில் வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து அந்த குடிசை வீட்டுக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில் அந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த நான்கு பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக மரணமடைந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
காரில் வந்தவர்கள் கூறப்படும் இளைஞர்கள் நான்கு பேர் காரை அங்கேயே விட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் மூலம் விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பியோடிய இளைஞர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். மனிதன் பட பாணியில் சாலையோரம் தூங்கி கொண்டவர்கள் மீது கார் ஏறி 4 பரிதாபமாக மரணமடைந்த சம்பவ சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.