கேரளா மாநிலம் மலப்புறம் பகுதியில் ஓட்டுநர் இல்லாமல் சாலையில் ஓடிய காரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கோட்டக்கல் பகுதியில் சாலை ஓரத்தில் கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த கார், திடீரென்று டிரைவர் இல்லாமலேயே பின்னோக்கி நகர்ந்து வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஓடியது. இதனால், காருக்குள் இருந்தவர்கள் கூச்சலிட்டு அலறினார்கள்.
இதைப் பார்த்த அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், கார் ஓட்டுநர் இல்லாமல் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் செல்வதைப் பார்த்து, உடனடியாக
தனது இருசக்கர வாகனத்தை சாலையில் நிறுத்தி காருக்குள் ஏறி பிரேக் போட்டு காரை நிறுத்தினார்.
காருக்குள் இருந்தவர்கள் நிம்மதி அடைந்தனர். வாகன நெரிசல் மிகுந்த பரபரப்பான சாலையில் டிரைவர் இல்லாமல் ஓடிய காரை, இருசக்கர வாகனத்தில் சென்றவர் உடனடியாக செயல்பட்டு மீட்டது பலரின் பாராட்டை பெற்றது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.