மலைப்பாதையில் கிடு, கிடு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரகொண்ட மலை மீது சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு அனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உமாபதி சாமி கும்பிடுவதற்காக சென்று இருந்தார்.
சாமி கும்பிட்டு திரும்பும் போது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வேகமாக ஓடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
மலைப்பாதையின் மேல் பகுதியில் இருக்கும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் சுமார் நூறு அடிக்கு கீழ் இருக்கும் சாலை மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் கார் கவிழ்ந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உமாபதி உடல் அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.