மலைப்பாதையில் கிடு, கிடு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி தலைமை ஆசிரியர் உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள தேவரகொண்ட மலை மீது சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு அனந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் உமாபதி சாமி கும்பிடுவதற்காக சென்று இருந்தார்.
சாமி கும்பிட்டு திரும்பும் போது அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து வேகமாக ஓடி கிடு கிடு பள்ளத்தில் கவிழ்ந்து நொறுங்கியது.
மலைப்பாதையின் மேல் பகுதியில் இருக்கும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் இறங்கிய கார் சுமார் நூறு அடிக்கு கீழ் இருக்கும் சாலை மீது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் தலைமை ஆசிரியர் உமாபதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மரணமடைந்தார். விபத்து பற்றிய தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த போலீசார் கார் கவிழ்ந்த போது பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மரணம் அடைந்த பள்ளி தலைமை ஆசிரியர் உமாபதி உடல் அனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
20 வருடங்களாக முன்னணி நடிகையாக உள்ளார் நடிகை தமன்னா. வாய்ப்பு இல்லாமல் வாய்ப்பை உருவாக்கி வருகிறார். காரணம் ஒரு படத்திற்கு…
நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவின் சிறந்த வில்லன் என பெயர் பெற்றவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக செய்து முடிப்பவர்.…
உதவி கேட்டதால் படுக்கைக்கு நண்பர்களே அழைத்த அவலம் தமிழ் சினிமா நடிகைக்கு ஏற்பட்டுள்ளது. ஜெமினி படம் மூலம் தமிழ் சினிமாவில்…
நீலகிரி, ஊட்டியில் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சித்தப்பா, உறவுக்கார அண்ணன் ஆகியோரை போலீசார் கைது…
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
This website uses cookies.