ஆர்ப்பாட்டக்காரர்கள் கூட்டத்தில் புகுந்த கார்…புகைப்படம் எடுக்க நின்றவர்கள் தூக்கி வீசப்பட்ட காட்சிகள்: கேரளாவில் அதிர்ச்சி..!!

கேரளா: மலப்புறத்தில் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே நின்ற இருவரை கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று மோதி இருவரும் சாலையில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

கேரள மாநிலம் மலப்புறத்தில் காவல் நிலையம் முன்பு நேற்றைய தினம் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட இரண்டு பேர் புகைப்படம் எடுப்பதற்காக சாலையின் நடுவே நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். இவர்கள் புகைப்படம் எடுக்கும் அதேவேளையில் ஓட்டுனரின் கவனக்குறைவால் கட்டுபாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் நடுவே நின்ற இரண்டு பேரின் மீது மோதியுள்ளது.

இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த மலப்புறம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

7 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

43 minutes ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

60 minutes ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

17 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

17 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

18 hours ago

This website uses cookies.