ஆந்திரா : மாநிலம் நெல்லூர் அருகே மகிளா தினம் என்று வெளிநாட்டு பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
லித்துவேனியா நாட்டை சேர்ந்த கரோலினா என்பவர் லித்துவேனியாவிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் பேருந்தில் பெங்களூர் புறப்பட்டு சென்றார். அப்போது அவரிடம் இந்திய பணம் இல்லாத நிலையில் டாலர்களில் டிக்கெட் கட்டணத்தை செலுத்த முயன்றார்.
பேருந்து நடத்துனர் அவர் கொடுத்த வெளிநாட்டு பணத்தை வாங்க மறுத்து விட்டார்.அப்போது அதே பேருந்தில் பயணித்த நெல்லூரை சேர்ந்த சாய்குமார் என்பவர் கரோலினாவுக்கு உதவும் வகையில் டிக்கெட் எடுக்க பணம் கொடுத்தார்.
இரண்டு பேரும் பெங்களூர் சென்ற நிலையில் அங்கு சாய்குமார் வாகன உதிரிபாகங்களை கொள்முதல் செய்தார். தேவையான அளவு பணம் இல்லாத நிலையில் கரோலினா அவருக்கு தன்னுடைய கணக்கிலிருந்து ஏடிஎம் மூலம் 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து கொடுத்தார்.
பின்னர் என்னுடைய ஊருக்கு வந்தால் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என்று கூறி கரோலினாவை நெல்லூர் அருகே உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு சாய்குமார் அழைத்து வந்தார்.
நேற்று காலை சாய்குமார் வீட்டில் கரோலினா குளித்து, உடை மாற்றிக் கொண்ட பின் அவரை பெங்களூரில் வழியாக கோவாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சாய்குமார் அழைத்து சென்றார்.
இந்த நிலையில் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சாய்தாபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது தன்னுடைய நண்பர் சையத் என்பவருக்கு போன் செய்து அவரை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு சாய்குமார் வரவழைத்தார்.
சாய்தாபுரம்,ராப்பூர் இடையே கரோலினாவை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கிய இரண்டு பேரும் அவரை தூக்கி சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது கரோலினா போட்ட சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று அவரை காப்பாற்றினர்.
இதுபற்றி கரோலினா அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சில்லகூறு அருகே சாய்குமார்,சையத் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை நடத்துகின்றனர்.
மகளிர் தினம் அன்று வெளிநாட்டு இளம்பெண் ஒருவரிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட முயன்ற இரண்டு பேரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஏற்பட்டுள்ளன.
சென்னையில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினரும், எதிராக திமுகவினரும் ஒரே இடத்தில் கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது. சென்னை: சென்னை, கோயம்பேட்டில்…
பிரம்மாண்டமாக தொடங்கிய மூக்குத்தி அம்மன் 2 நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் "மூக்குத்தி அம்மன் 2" திரைப்படத்தின் பூஜை…
தமிழகத்தில் பல ஆண்டுகளாக இருமொழிக் கொள்கை அமலில் உள்ளது. தற்போது மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என…
இது என்னுடைய கஷ்ட காலம்.! நடிகர் நீல் நிதின் முகேஷ் ஒரு திறமையான நடிகராக இருந்தாலும்,தமிழ் சினிமாவில் நிலையான இடத்தை…
சென்னையில், தந்தையைக் கொலை செய்துவிட்டு தப்பிய மகன் மற்றும் தாயை ஆட்டோ ஓட்டுநர் காவல் நிலையம் அழைத்துச் சென்றது தொடர்பாக…
துள்ளுவதோ இளமை படம் மூலம் தான் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் ஏராளமானோர் அறிமுக நடிகர்களாக இணைந்தனர்.…
This website uses cookies.