இந்தியா

உ.பிக்கு கொடுத்ததில் பாதி கூட தமிழகத்துக்கு இல்லை.. வரிப்பகிர்வை விடுவித்த மத்திய அரசு!

வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,78,173 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு 7,268 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி: மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக 1 லட்சத்து 78 ஆயிரத்து 173 கோடியை இன்று (அக்.10) விடுவித்துள்ளது. இது 89 ஆயிரத்து 86 கோடி என்னும் வழக்கமான மாதாந்திர வரிப் பகிர்வுக்குப் பதிலாக, கூடுதல் வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்தவும், அவற்றின் வளர்ச்சி அல்லது நலத்திட்டங்களின் செலவினங்களுக்கு நிதி அளிக்கவும் ஏற்ற வகையில் இந்த வரிப் பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்திற்கு 31 ஆயிரத்து 962 கோடி ரூபாயும், குறைந்தபட்சமாக கோவா மாநிலத்திற்கு 688 கோடி ரூபாயும் வரிப் பகிர்வு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தமிழ்நாட்டிற்கு 7 ஆயிரத்து 268 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீடு, வாகன கடன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

இதைத் தவிர, ஆந்திரப் பிரதேசம் ரூ.7,211 கோடி, அருணாச்சலப் பிரதேசம் ரூ.3,131 கோடி, அசாம் ரூ.5,573 கோடி, பீகார் ரூ.17,921 கோடி, சத்தீஸ்கர் ரூ.6,070 கோடி, குஜராத் ரூ. 6,197 கோடி, ஹரியானா ரூ.1,947 கோடி, இமாச்சலப் பிரதேசம் ரூ.1,479 கோடி, ஜார்க்கண்ட் ரூ.5,892 கோடி, கர்நாடகா ரூ.6,498 கோடி, கேரளா ரூ.3,430 கோடி, மத்தியப் பிரதேசம் ரூ.13,987 கோடி, மகாராஷ்டிரா ரூ.11,255 கோடி, மணிப்பூர் ரூ.1,276 கோடி, மேகாலயா ரூ.1,367 கோடி என வரிப் பகிர்வு விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மிசோரம் ரூ.891 கோடி, நாகலாந்து ரூ.1,014 கோடி, ஒடிசா ரூ.8,068 கோடி, பஞ்சாப் ரூ.3,220 கோடி, ராஜஸ்தான் ரூ.10,737 கோடி, சிக்கிம் ரூ.691 கோடி, தெலுங்கானா ரூ.3,745 கோடி, திரிபுரா ரூ.1,261 கோடி, உத்தராகண்ட் ரூ.1,992 கோடி மற்றும் மேற்கு வங்கம் ரூ.13,404 கோடி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Hariharasudhan R

Share
Published by
Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

2 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

3 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

3 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

4 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

4 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

4 hours ago

This website uses cookies.