பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை எம்பி சுஷில் மோடி , ஓரினச்சேர்க்கை திருமணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்று கூறினார்.
மேலும், இடதுசாரிகள் சிலர் நாட்டின் நெறிமுறைகளை மாற்ற முயற்சிக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்ற வளாகத்தில் வெளியே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஓரினச்சேர்க்கை திருமணங்களை ஏற்க இந்திய சமூகம் தயாராக இல்லை என்றும் அது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு பொருத்தமற்றது என்றார்.
இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்திற்கு ஓரினச்சேர்க்கை திருமணம் பொருத்தமற்றது. ஆனால் சில இடதுசாரிகள் மற்றும் ஆர்வலர்கள் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்று ஒரே பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
இரண்டு நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டில் அமர்ந்து இது குறித்து முடிவெடுப்பது சரியாக இருக்காது என்று தெரிவித்தார். ஓரினச்சேர்க்கை திருமணங்களை சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது.
இது முதலில் நாடாளுமன்றத்திலும், மக்கள் மத்தியிலும் விவாதிக்கப்பட வேண்டும். எந்த மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து பெண்களின் திருமண வயதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றார்.
இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர் திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கக் கோரிய இரண்டு மனுக்களுக்கு பதிலளிக்க 2023 ஜனவரி 6 ஆம் தேதி வரை அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடைசியாக அவகாசம் அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.