அனைத்து மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளை தயார் நிலையில் வைக்குமாறு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியா முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். மேலும், குளிர்பிரதேசங்களை தேடி செல்கின்றனர்.
வெப்ப தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைகளுக்காக செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :- கோடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். அதன் மூலம் வெப்பத்தின் தாக்கம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையை குறைக்கலாம்.
மிதமிஞ்சிய வெப்பத்துக்கு ஏற்ப மருத்துவமனைகளின் வசதிகளை பெருக்க வேண்டும். குளிரூட்டும் சாதனங்களை தடையின்றி இயக்கவும், உட்புற வெப்பநிலையை குறைப்பதற்கு தேவையான கூரைகள், மறைப்புகளை நிறுவ வேண்டும். வெப்பத்தின் தாக்கத்தால் ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த தேவையான அத்தியாவசிய மருந்துகளை போதிய அளவு கையிருப்பில் வைத்து கொள்ள வேண்டும். இதுபற்றி மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வேண்டும், எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக விளங்கும் நிகழ்ச்சிதான் “குக் வித் கோமாளி”. 2019 ஆம் ஆண்டு…
கார்த்திக் சுப்பராஜ்-சூர்யா கூட்டணி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளைக்கு வருங்கால மனைவியின் உல்லாச வீடியோ அனுப்பிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம்…
வடிவேலு-சுந்தர் சி கம்பேக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து நடித்து இன்று உலகம்…
கோவை கார்ட்டூர் காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.…
எல்லாம் ஸ்பாட்ல வர்ரது பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல…
This website uses cookies.