இறந்த மகளின் உடலைத் தூக்கிக் கொண்டு சிறுமியின் தந்தை 10 கி.மீ. நடந்தே சென்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஐஸ்வர் தாஸ். இவருக்கு 7 வயதான சுரேகா என்ற மகள் இருந்தார். இதனிடையே, கடந்த சில நாட்களாக சுரேகா தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையில், சிறுமியை அவரது தந்தை நேற்று லகன்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, உடலில் ஆக்ஸிஜன் அளவும் மிக குறைவானதாக இருந்தது.
சிறுமிக்கு போதுமான சிகிச்சை அளித்தும், அவர் காலை 7.30 மணிக்கு உயிரிழந்தார். இது தொடர்பாக பெற்றோரிடம் தெரிவித்த மருத்துவர்கள், உடலை ஏற்றி செல்லும் வாகனம், 9:20 மணிக்கு வரும் என தெரிவித்தனர்.
ஆனால், மகளின் இறப்பை தாங்க முடியாத ஐஸ்வர் தாஸ், மகளின் உடலை தோளில் போட்டு, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்தவாறே கொண்டு சென்றார். இதனை சாலையில் கண்ட சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ மாநில சுகாதார அமைச்சர் டிஎஸ் சிங் தியோவின் கவனத்திற்கும் சென்றது. இதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தூத்துக்குடி அருகே காதலை கைவிட்டுச் சென்ற இளம்பெண்ணை தீக்கிரையாக்கி கொன்ற இளைஞர் உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி:…
தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்…
தங்கள் கட்சியை வளர்ப்பதற்காகவும், தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் விஜய் அவ்வாறு கூறியுள்ளதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். சேலம்: சேலத்தில் இன்று அதிமுக சார்பாக…
பாலிவுட் நடிகை ஷாக் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "சிறகடிக்க ஆசை" தொடரில் வித்யா எனும் கதாபாத்திரத்தின் தோழியாக நடித்து…
விழுப்புரம் அருகே, ஹெட்போன் போட்டுக் கொண்டு தண்டவாளம் அருகே அமர்ந்திருந்த இளைஞர் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம்,…
நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தர்ஷினியின் மரணத்திற்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசே முழு பொறுப்பு என எடப்பாடி பழனிசாமி…
This website uses cookies.