இனி செம்மரம் கடத்தலில் ஈடுபட்டால் இது தான் தண்டனை : திருப்பதியில் தனி நீதிமன்றத்தை துவக்கி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா எச்சரிக்கை!

திருப்பதி : செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க திருப்பதியில் தனி நீதிமன்றத்தை தலைமை நீதிபதி என். வி. ரமணா திறந்து வைத்தார்.

திருப்பதியில் உள்ள நகர்புற அபிவிருத்தி கழக வணிக வளாகத்தில் புதிதாக செம்மர கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.

பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சேஷாசலம் மலைப்பகுதியில் வளரும் செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.

கடத்தலில் ஈடுபட்டு போலீசில் சிக்குபவர்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குறைந்த தண்டனையுடன் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

எனவே 2016 ஆம் ஆண்டில் முதல்முறை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் இரண்டாவது முறை அதே குற்றத்தை செய்பவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையுடன் 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது.

ஆனால் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இல்லாத காரணத்தால் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை வழக்கு பதிவு செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.

இனிமேல் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் புதிய சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வார்கள். இந்த நீதிமன்றத்தில் விரைவில் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும். செம்மரக் கடத்தல் தொடர்பாக 2018 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று அப்போது கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!

நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…

10 hours ago

பிளாக்கில் டிக்கெட் விற்பவர்களுக்கு முதல்வர் கனவு.. விஜய்யை மறைமுமாக சாடிய அமைச்சர்!

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…

10 hours ago

கஞ்சா வைத்திருந்த பிரபல சினிமா இயக்குநர்கள்..வளைத்து வைளத்து கைது செய்யும் போலீசார்!

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…

12 hours ago

வெற்றிமாறன் மேல் உள்ள பயத்தால் சூர்யா எடுத்த திடீர் முடிவு? அப்போ வாடிவாசலோட நிலைமை?

இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…

12 hours ago

அடுத்தவ புருஷனை பங்கு போட்டது தப்புதான்.. ஆனா பாலு மகேந்திரா எனக்கு எல்லாமே கொடுத்தாரு ; நடிகை ஓபன்!

நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…

12 hours ago

ஜெயிலரை ஓவர் டேக் செய்யப்போகும் குட்  பேட் அக்லி! விரைவில் ஒரு தரமான சம்பவம்?

தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…

13 hours ago

This website uses cookies.