திருப்பதி : செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க திருப்பதியில் தனி நீதிமன்றத்தை தலைமை நீதிபதி என். வி. ரமணா திறந்து வைத்தார்.
திருப்பதியில் உள்ள நகர்புற அபிவிருத்தி கழக வணிக வளாகத்தில் புதிதாக செம்மர கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா திறந்து வைத்தார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சேஷாசலம் மலைப்பகுதியில் வளரும் செம்மரங்களை வெட்டி கடத்துவது கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இதனை தடுப்பதற்கு அரசு எத்தனையோ முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால் செம்மரங்களுக்கு வெளிநாடுகளில் கிடைக்கும் அதிக விலை காரணமாக இந்த கடத்தல் தொடர்ந்து நடைபெறுகிறது.
கடத்தலில் ஈடுபட்டு போலீசில் சிக்குபவர்கள் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குறைந்த தண்டனையுடன் சிறையில் இருந்து வெளியில் வந்து மீண்டும் கடத்தலில் ஈடுபடுகின்றனர்.
எனவே 2016 ஆம் ஆண்டில் முதல்முறை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையுடன் மூன்று லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் இரண்டாவது முறை அதே குற்றத்தை செய்பவருக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனையுடன் 7 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கவும் சட்டம் இயற்றப்பட்டது.
ஆனால் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் இல்லாத காரணத்தால் இந்த சட்டத்தின் கீழ் இதுவரை வழக்கு பதிவு செய்ய இயலாத நிலை இருந்து வந்தது.
இனிமேல் செம்மரக் கடத்தலில் ஈடுபடுவோர் மீது போலீசார் புதிய சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்வார்கள். இந்த நீதிமன்றத்தில் விரைவில் செம்மரக் கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும். செம்மரக் கடத்தல் தொடர்பாக 2018 வழக்குகள் விசாரணையில் உள்ளன என்று அப்போது கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெருஞ்சேரியில் 19ஆம் தேதி சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்…
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
This website uses cookies.