முதலமைச்சர் கைது.. தீவிர விசாரணையில் அமலாக்கத்துறை : அடுத்த முதலமைச்சராக அமைச்சர் தேர்வு!
ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன். ஆனால் நீதிமன்றம்மனுக்களை தள்ளுபடி செய்யவே நேற்று அமலகத்துறை முன் ஆஜரானார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து ஜனவரி 27ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதிக்குள் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பி இருந்தனர். இந்த சம்மனுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடினார் சோரன். ஆனால் நீதிமன்றம்மனுக்களை தள்ளுபடி செய்யவே நேற்று அமலகத்துறை முன் ஆஜரானார் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்.
அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்னரே ஜார்கண்டு கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்துவிட்டார். இதன் பிறகு அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகினர் சோரன். பல மணிநேர விசாரணை முடிந்த பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹேமந்த் சோரன் கைதுக்கு பின்னர் அடுத்த ஜார்கண்ட் மாநில முதல்வர் யார் என்று கேள்வி எழுந்தது. இதில் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா மற்றும் ஜார்கண்ட் மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சம்பாய் சோரன் ஆகியோர் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன.
ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவுக்கு ஆதரவு இருக்கும், அவர்தான் அடுத்த முதல்வராக வருவார் என கூறப்பட்ட நிலையில், அவர் எம்எல்ஏவாக இல்லை. இந்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடைத்தேர்தல் வைக்கவும் முடியாது என்ற காரணத்தால் அவருக்கு எம்எல்ஏ ஆதரவு குறைவாக இருந்துள்ளது.
சம்பாய் சொரணை முதல்வராக்க வேண்டும் என்று பலரும் ஆதரவளித்ததை எடுத்து சம்பா சூரன், தன்னை முதல்வர் பதவிக்கு ஆதரவு அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார்.
முன்னதாக ஆளும் ஜார்கண்ட் மாநில முக்தி மோர்ச்சாவுடன் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியானது, ஜார்கண்ட் முக்தி மோட்சாவுக்கு என்றும் துணையாக, ஆதரவாக இருப்போம் என்று கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
This website uses cookies.