ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மசூலிப்பட்டினம் வங்கக் கடலில் 5,156 கோடி ரூபாய் செலவில் துறைமுகம் அமைக்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்தது.
ஆந்திர மாநில அரசின் சொந்த துறைமுகமாக அமைய இருக்கும் இதற்கு தேவையான அனைத்து அனுமதிகளும் கிடைத்துள்ளன.
மொத்தம் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமையும் மசூலி பட்டினம் துறைமுக கட்டுமான பணியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று துவக்கி வைத்தார்.
இதன் மூலம் 25 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உற்பத்தியாகும் விளை பொருட்கள், உற்பத்தி பொருட்கள் ஆகிவற்றை இங்கிருந்து எளிதில் ஏற்றுமதி செய்யலாம் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆந்திர மாநில அரசுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் இதன் மூலம் கிடைக்கும் என்றும் கருதப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
வடிவேலுவின் கம்பேக் 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு. அந்த சமயத்தில் திமுகவை எதிர்த்து…
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டத்திற்குட்பட்ட தென்குவளவேலி என்ற பகுதியைச் சேர்ந்த சங்கர் வயது 45. இவர் கூலி வேலை செய்து…
This website uses cookies.