ஆந்திரா : திருப்பதி மலையில் பக்தர்களுக்கு அதிர்ச்சி அளித்த தேவஸ்தானத்தின் எஸ்.வி.பி.சி தொலைக்காட்சி ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனலில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகள் அனைத்தும் திருப்பதி மலையில் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ள பெரிய அளவிலான எல்இடி திரைகளில் ஒளிபரப்பாகும்.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் அவற்றை கண்டு பயனடைய இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென்று எஸ்.வி.பி.சி சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு பதிலாக சினிமா பாட்டுகள் சுமார் அரை மணி நேரம் எல்இடி திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன.
இதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த தேவஸ்தான சேனல் ஊழியர்கள் பின்னர் அதனை மாற்றி எல்.இ.டி திரைகளில் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பிற்கு ஏற்பாடுகளை செய்தனர்.
ஏழுமலையான் பக்தி பாடல்கள் மற்றும் நாடகங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் சினிமா பாடல் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் ஏழுமலையான் பக்தர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால் பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கேம் சேஞ்சர் படத்தில் 350 துணை நடிகர்களுக்கான சம்பளம் கொடுக்காமல் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர். சென்னை: பிரமாண்ட் இயக்குநராக…
நல்ல நண்பர்களாக வலம் வந்த தமிழ் சினிமா நட்சத்திரங்களான தனுஷ் மற்றும் நயன்தாரா இடையே தற்போது கோர்ட்டில் கேஸ் நடத்தும்…
தினம்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சி தொண்டன் கைது செய்யப்பட்டு கொண்டு இருக்கிறான் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
கயாடு போன் மீமை பார்த்து கலாய்த்த பிரதீப் ட்ராகன் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள கயாடு லோஹர் தனக்குத்தானே மீம்ஸ் போட்டுகொண்டுள்ளார்,இந்த…
ரசிகரின் கமெண்ட்க்கு ஜோதிகா பதிலடி நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக…
This website uses cookies.