ஆந்திர அரசு புதிதாக அறிவித்த அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை திரும்ப பெறக்கோரி விஜயவாடாவில் மாபெரும் பேரணி நடைபெற்றது.
ஆந்திர மாநில அரசு தன்னுடைய ஊழியர்களுக்கு சமிபத்தில் 24 சதவீத ஊதிய உயர்வு வழங்கி முடிவு செய்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அரசின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஊதிய உயர்வு அறிவித்த அரசு வீட்டு வாடகை படி உள்ளிட்ட பல்வேறு படிகளை குறைத்துள்ளது. எனவே ஊதிய உயர்வு தொடர்பான புதிய அரசாணையை ரத்து செய்து பழைய முறையிலேயே தங்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு நேற்று புதிய அரசாணை அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியத்தை செலுத்தியது. எனவே வெகுண்டெழுந்த அரசு ஊழியர்கள் ஒன்றிணைத்து இன்று விஜயவாடாவில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினர்.
அரசு ஊழியர்கள் விஜயவாடா செல்லாமல் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனாலும் ஊழியர்கள் போலீசார் விதித்த தடையை மீறி விஜயவாடாவில் திரண்டு இன்று மாபெரும் பேரணி நடத்தினர். அரசு பள்ளி ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பினர், அரசு ஊழியர்கள் சங்க கூட்டமைப்பினர் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விஜயவாடாவில் திரண்டு அரசின் புதிய ஊதிய உயர்வு அரசாணைக்கு எதிராக நடத்திய மாபெரும் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.