காங்கிரஸ் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அனைத்து எதிர்கட்சிகளும் ஒருங்கிணைந்து இண்டியா எனும் கூட்டணியை அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. இண்டியா கூட்டணியில் ஆம் ஆத்மி, சமாஜ்வாதி கட்சி, தேசிய மாநாட்டு கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை காங்கிரஸ் கட்சி நிறைவு செய்து விட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தமது முதலாவது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 39 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுகிறார்.
திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார். கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதகாரணம் கண்ணூர் தொகுதியிலும், ஆலப்புழா தொகுதியில் கேசி வேணுகோபாலும் போட்டியிடுகின்றனர். சத்தீஷ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜ்நந்த்கான் தொகுதியிலும், டிகே சுரேஷ்- பெங்களூர் ஊரக தொகுதியிலும் போட்டியிட உள்ளனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.