காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், நாளை மறுநாள் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் அக்கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக மோதியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என யாருமே போட்டியிடவில்லை.
22 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவதால், வாக்களிக்கு முறை குறித்து அக்கட்சியின் மத்திய தேர்தல் அமைப்பு தலைவர் மதுசூதனன் மிஸ்திரி நேற்று விளக்கினார். 24 ஆண்டுகளுக்கு பிறகு நேரு குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிடாத நிலையில், புதிய தலைவர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த தேர்தலில் மொத்தம் 211 கட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வாக்களித்தனர்.
இந்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே அல்லது சசி தரூர் ஆகியோரில் யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சி தொண்டர்களிடையே எழுந்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றியாளர் அறிவிக்கப்படும்.
தியேட்டரை காலி பண்ணும் விடாமுயற்சி அஜித் நடிப்பில் வெளிவந்த விடாமுயற்சி திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதியை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.இதனால்…
மாணவர்களை கெடுக்கும் சினிமா தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா திரைப்படம் மாணவர்களின் மனநிலையை கெடுத்து வைக்கிறது…
பிரார்த்தனையில் ஈடுபட்ட ரிஷ்வான் துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளிடேயே நடைபெற்ற சாம்பியன்ஸ் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன்…
தமிழ் புத்தாண்டு தினத்தன்று விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…
பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் வடிவேல் பேச்சு நடிகரும் நடன இயக்குனருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னையில் பிரமாண்டமாக பெப்ரவரி…
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில், தகுதியுள்ள நபர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்…
This website uses cookies.