காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகள் ஒதுக்கீடு… கடைசி நேரத்தில் முடிவை மாற்றிய முக்கிய கட்சி : தீர்ந்தது சிக்கல்!
நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட தேசிய கட்சிகள், மாநிலக் கட்சிகள் தீவிரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், தேர்தலை முன்னிட்டு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைபயணம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்து வருகிறது. தொகுதி ஒதுக்குவதில் காங்கிரஸ் கட்சிக்கும் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டு வந்தது.
இதனால் கட்சியின் தொகுதி பங்கீடு முடிந்த பிறகே யாத்திரையில் பங்கேற்பதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்திருந்தார். இதையடுத்து கடைசி வாய்ப்பாக காங்கிரஸ் கட்சிக்கு 17 மக்களவை தொகுதிகளை வழங்க அகிலேஷ் முன்வந்துள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சிகளுக்கான கூட்டணி சுமுகமாக முடிந்ததாக அகிலேஷ் யாதவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிடும் என தகவல் வெளியாகி உள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் தொகுதி பங்கீட்டால் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சிக்கல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
சொல் ஒன்று செயல் ஒன்றாக விஜயகாந்த் இருந்ததில்லை எனக் கூறிய பிரேமலதா, கோலா, நகை விளம்பரங்களில் சிலர் நடிப்பர் என…
சென்னையில், இன்று (மார்ச் 10) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 10 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 50…
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம்…
ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். துபாய்: 9வது ஐசிசி…
This website uses cookies.