மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக்கும், வீரர் பஜ்ரங் பூனியாவும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்து பேசினர்.
பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பொறுப்பில் இருந்து பிரிஜ் பூஷன் சிங் விலகினார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வானார்.
இதற்கு மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்த மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார். இதனால், பல்வேறு தரப்பினர் பாஜகவை கடுமையாக விமர்சித்தனர்.
இதைத் தொடர்ந்து, கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு தனக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதை திரும்ப அளிக்கப் போவதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா அறிவித்தார். மேலும், டெல்லியில் பிரதமரை சந்தித்து விருதை திருப்பிக் கொடுக்க சென்ற அவர், சாலையில் அதனை வைத்து விட்டு, இந்த விருதை பிரதமரிடம் கொடுக்குமாறு கூறினார்.
இந்நிலையில், சாக்ஷி மாலிக்கும் பஜ்ரங் பூனியாவும் இணைந்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியைச் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரியங்கா காந்தி, “நான் ஒரு பெண்ணாக அவருக்கு ஆறுதல் கூற வந்தேன்,” எனக் கூறினார்.
சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…
நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…
தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…
சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…
மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…
பிரம்மாண்ட விருந்து! தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா,தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து கோலிவுட்டின் நெருங்கிய பிரபலங்களுக்கு…
This website uses cookies.