காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த தோல்விகளால் அதன் மூத்த தலைவர்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். இதற்கு காரணம், கட்சியின் தலைமை வலுவாக இல்லாததுதான் என்று அவர்கள் கருதுகின்றனர்.
எனவே, சிறப்பான, நல்ல தலைவரை கட்சிக்கு நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்சியின் தலைமைக்கு எதிராக திரண்டவர்கள் ஜி23 தலைவர்கள் அணியாகும்.
இதில், இடம்பெற்றிருந்தவர்தான் குலாம் நபி ஆசாத். இவர் நேரடியாக காங்கிரஸ் கட்சியின் குறைகளை எடுத்துக் கூறி வந்தார். எனவே, ஜி23 தலைவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் சோனியா, ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகுவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைக் குழு தலைவர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த இவர், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.
இன்னும் ஒரு சில நாட்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து விலகியிருப்பது காங்கிரஸுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.