ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மனுபோலு பத்வேல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டயர் பஞ்சர் ஆனதால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் பேருந்து மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சமயத்தில் பேருந்தில் 22 பேர் பயணம் செய்த நிலையில் கோவூர் மண்டலம் ரேகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே சலீமா (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனுபோலு எஸ்.ஐ முத்தியால் ராவ் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லூர் மற்றும் கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.