ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மனுபோலு பத்வேல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டயர் பஞ்சர் ஆனதால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் பேருந்து மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சமயத்தில் பேருந்தில் 22 பேர் பயணம் செய்த நிலையில் கோவூர் மண்டலம் ரேகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே சலீமா (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனுபோலு எஸ்.ஐ முத்தியால் ராவ் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லூர் மற்றும் கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.