ஆந்திரா : நெல்லூரில் இருந்து திருப்பதி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி 15 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் நெல்லூரில் இருந்து திருப்பதி நோக்கி வந்துகொண்டிருந்த அரசு பேருந்து மனுபோலு பத்வேல் கிராஸ் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென டயர் பஞ்சர் ஆனதால் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் பின்னால் வந்து கொண்டிருந்த லாரியும் பேருந்து மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து சமயத்தில் பேருந்தில் 22 பேர் பயணம் செய்த நிலையில் கோவூர் மண்டலம் ரேகுண்டபாடு பகுதியைச் சேர்ந்த எஸ்.கே சலீமா (வயது 65) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மனுபோலு எஸ்.ஐ முத்தியால் ராவ் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லூர் மற்றும் கூடூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.