கான்பூர்: இந்தியாவில் கொரோனா 4வது அலை ஜூன் மாத இறுதியில் தொடங்க வாய்ப்புள்ளதாக ஐஐடி விஞ்ஞானிகள் கணித்து அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் அலையாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இதன்பின்னர் கடந்த 2021ம் ஆண்டு 2வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி சென்றது.
இதற்கு டெல்டா கொரோனா வகை அடிப்படையாக அமைந்திருந்தது. அதன்பின், டெல்டா பிளஸ், ஒமிக்ரான் ஆகிய வகைகளாலும் பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் அதிவேக பரவல் கொண்டிருந்தது. இருப்பினும், உயிரிழப்புகள் அதிக அளவில் இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கொரோன பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கொரோனா 4வது அலை பற்றிய கணிப்புகள் வெளிவந்துள்ளன. இதுபற்றி ஐ.ஐ.டி. கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்தியாவில் கொரோனா 4வது அலையானது வருகிற ஜூன் 22ம் தேதி தொடங்கி அக்டோடபர் 24ம் தேதி வரை நீடிக்கும். எனினும், புதிய கொரோனா வகைகளின் வெளிப்படுதல் மற்றும் பூஸ்டர் டோஸ் உள்பட மக்களின் தடுப்பூசி நிலை ஆகியவற்றுக்கு ஏற்ப4வது அலையின் கடுமை அமையும்.
4வது அலை பரவல் தோன்றினால், அது 4 மாதங்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ளது. இந்த அலையானது ஆகஸ்டு 15ம் தேதி முதல் ஆகஸ்டு 31ம் தேதி வரை உச்சமடையும். அதன்பின்னர் குறைய தொடங்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் கொரோனா அலை பற்றி 3வது முறையாக ஐ.ஐ.டி. கான்பூர் கணித்து வெளியிட்டுள்ளது. அவற்றில் குறிப்பிடும்படியாக, 3வது கொரோனா அலை பற்றி வெளியான கணிப்பு ஒரு சில நாட்கள் தள்ளி சென்றது தவிர்த்து, துல்லியமுடன் அமைந்திருந்தது.
ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்த செல்வராகவன் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் பல படங்களை இயக்கி வெற்றிகண்டுள்ளார்,சமீப…
அரியலூரில் தவணைத் தொகை வசூலிக்கச் சென்ற பைனான்ஸ் ஊழியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட எரிக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
This website uses cookies.