ஆகலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கள்ள நோட்டுக்களை வார சந்தைகளில் புழக்கத்தில் விட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் அன்னமய மாவட்டம் மதன பள்ளியில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிலர் கலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரை அடுத்து மதனப்பள்ளி டி.எஸ்.பி. ரவி மனோகர் ஆச்சாரி கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதன பள்ளி கடைவீதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட சித்தூரை சேர்ந்த சோம சேகர், வெங்கடேஷ் மற்றும் பங்காரு பாளையத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கலர் ஜெராக்ஸ் மூலம் தயார் செய்யப்பட்ட 200 ரூபாய்,500 ரூபாய் நோட்டுக்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சித்தூர் மற்றும் அன்னமய்யா ஆகிய மாவட்டங்களில் ஏதாவது ஒரு பகுதியில் தினமும் சந்தை நடைபெறும். அந்த சந்தைக்கு சென்று இதுபோல் கள்ள நோட்டுகளை அவர்கள் தொடர்ந்து புழக்கத்தில் விட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.