கடந்த சனிக்கிழமை துவங்கி இன்று வரை தொடர் விடுமுறை நாட்கள் ஆகையால் ஏழுமலையானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலைக்கு வந்துள்ளனர். இதனால் மூன்று நாட்களாக திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இன்றும் அதே நிலை தொடரும் நிலையில் இலவச தரிசனத்திற்காக வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்திற்கு வெளியே சுமார் 4 கிலோ மீட்டர் நீள வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருக்கின்றனர்.
வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், பால், டீ ,காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சுமார் 40 மணி நேரம் காத்திருந்தால் மட்டுமே ஏழுமலையான இலவசமாக தரிசிக்க முடியும் என்ற நிலை உள்ளது.
நேற்று ஒரே நாளில் 92,328 பக்தர்கள் ஏழுமலையானை வழிபட்டனர். அவர்கள் ஏழுமலையானுக்கு 4 கோடி 36 ரூபாயை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். நேற்று ஏழுமலையானுக்கு தலைமுடி சமர்ப்பித்து மொட்டை போட்டு கொண்ட பக்தர்களின் எண்ணிக்கை 52,969 ஆகும்.
பக்தர்கள் விரைவாக ஏழுமலையான வழிபட வசதியாக இம்மாதம் 21ஆம் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் அடிப்படையிலான விஐபி தரிசனத்தை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.