தலீத் சிறுவனை சாதியைச் சொல்லித் திட்டி, கால்களை நக்கச் செய்த கொடூரம் நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் சுமார் 2 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை 5 அல்லது 6 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், அடியால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் அந்த நபரை, வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களை நக்கச் செய்தது பார்ப்போரை கொந்தளிக்கச் செய்யும் வகையில் இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் நடந்தது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட தலீத் சிறுவன் 10ம் வகுப்பு படித்து வந்ததாகவும், கணவனை இழந்த தாயுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், சித்ரவதை செய்த நபர்களில் ஒருவரின் வயலில் அந்த நபரின் தாயார் வேலை செய்ததாகவும், அதற்கு ஊதியம் கேட்கச் சென்ற சிறுவனை, அவர்கள் கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்ட்ர் ஹர்திக் பாண்டியா அடிக்கடி பேசு பொருளாக உலா வருகிறார். தனது மனைவியை விவாகரத்து செய்வதாக…
தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்தில் 31 தொகுதிகள்தான் இருக்கும். 8 தொகுதிகளை இழக்க வேண்டியச் சூழல் ஏற்படும் என முதலமைச்சர்…
கணவரை இழந்த நடிகைகளை குறி வைத்து அவர்களுடன் சில பல நாட்கள் பழகி கழட்டி விடுவதே இந்த பிரபல நடிகரின்…
இந்தியாவை ஒரே நாடு ஒரே மொழி என்ற அடிப்படையில் மாற்ற வேண்டும் எனும் முயற்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது…
பாஜக, தமிழுக்கு எதிராக செயல்படுவது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார். கோயம்புத்தூர்:…
லைகா நிறுவனம் தமிழ் சினிமாவை கத்தி படம் மூலம் தயாரிக்க ஆரம்பித்தது. அந்த படம் லைகா நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை…
This website uses cookies.