தலீத் சிறுவனை சாதியைச் சொல்லித் திட்டி, கால்களை நக்கச் செய்த கொடூரம் நடந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் சுமார் 2 நிமிடம் 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், தலீத் சமுதாயத்தைச் சேர்ந்த நபரை 5 அல்லது 6 பேர் கொண்ட கும்பல் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது.
மேலும், அடியால் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருக்கும் அந்த நபரை, வாகனத்தில் அமர்ந்திருக்கும் ஒருவரின் கால்களை நக்கச் செய்தது பார்ப்போரை கொந்தளிக்கச் செய்யும் வகையில் இருந்தது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் நடந்தது என்றும், இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளதும் கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், பாதிக்கப்பட்ட தலீத் சிறுவன் 10ம் வகுப்பு படித்து வந்ததாகவும், கணவனை இழந்த தாயுடன் வசித்து வருவதும் தெரிய வந்தது.
மேலும், சித்ரவதை செய்த நபர்களில் ஒருவரின் வயலில் அந்த நபரின் தாயார் வேலை செய்ததாகவும், அதற்கு ஊதியம் கேட்கச் சென்ற சிறுவனை, அவர்கள் கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.