மேடையில் உயிருடன் கோழியின் தலையை கடித்து துப்பிய நடனக் கலைஞர் : தட்டித் தூக்கிய போலீசார்!!
Author: Udayachandran RadhaKrishnan13 ஜூலை 2024, 5:59 மணி
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் தனியார் மூலம் நடந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடும்போது ஒரு நடனக் கலைஞர் படலுக்கு ஏற்ப கோழியின் தலையைக் கடித்து துண்டித்தார்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து. இதனையடுத்து பீட்டா அமைப்பு நடன நிகழ்ச்சியின் போது குழந்தைகள் பலர் இருந்த கூட்டத்தின் முன்னிலையில் கோழியின் தலையை வேண்டுமென்றே ஒருவர் பற்களால் கடித்ததாக புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் நடனக் கலைஞர் மற்றும் அமைப்பாளர்கள் மீது ஐ.பி.சி. விலங்குகள் வதை தடுப்புச் சட்டம்-1960 இன் தொடர்புடைய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Views: - 233
0
0