10 நாட்களில் மகளுக்கு திருமணம்… இளைஞருடன் ஓட்டம் பிடித்த தாய் : ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட்.. அதிர்ச்சி சம்பவம்!!

திருமணத்திற்கு 10 நாட்களுக்கு முன்பு பெண்ணின் தாயார் இளைஞருடன் ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் கோட்வாலி பகுதியில் தாய் தனது மகளுக்காக வரன் தேடியுள்ளார்.

மாப்பிள்ளை பார்த்து, திருமண தேதியை குறித்துள்ளனர். 38 வயதான தாய் தனது பெண்ணின் திருமணத்திற்காக தீவிரமாக ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.

சரியாக திருமணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பு இளைஞருடன் தாய் ஓடியுள்ளார். இன்னொரு அதிர்ச்சி சம்பவம் என்னவென்றால், மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்த நகைகளையும் எடுத்துக்கொண்டு மாயமாகிவிட்டார்.

காதலனுடன் ஓடிய பெண்ணின் கணவர் ஓராண்டுக்கு முன் உயிரிழந்துவிட்டார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளுக்குத் திருமணம் செய்து வைக்க அந்த பெண் ஏற்பாடு செய்துள்ளார். வரும் டிச.14ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது.

திருமணத்திற்கு 10 நாட்களே இருந்த நிலையில், திருமண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. அனைத்து உறவினர்களுக்கும் திருமண பத்திரிக்கை அனுப்பப்பட்டு இருந்தது. சில நாட்களில் திருமணம் நடக்க இருந்ததால் நெருங்கிய உறவினர்கள் கூட வரத் தொடங்கிவிட்டனர்.

இந்தச் சூழலில் தான் கடந்த சனிக்கிழமை இரவு மணப்பெண்ணின் தாயார் திடீரென மாயமானார். முதலில் அருகில் தான் எங்காவது சென்றிருப்பார் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமடைந்த உறவினர்கள் தேட தொடங்கியுள்ளனர்.

அப்போது தான் மணப்பெண்ணின் தாயாருக்கு இளம் வயதில் காதலன் ஒருவன் இருப்பதும் அவனும் காணாமல் போனதும் உறவினர்களுக்குத் தெரிய வந்தது. இதனால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், மற்றொரு அதிர்ச்சி வீட்டிலேயே காத்திருந்தது. அதாவது வீட்டில் இருந்த லட்சக்கணக்கான பணம் மற்றும் நகைகள் காணாமல் போனதையும் உறவினர்கள் கண்டுபிடித்தனர்.

அவர்கள் போலீசாரிடம் இது தொடர்பாகு புகார் அளித்திருந்தனர். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இந்தச் சம்பவம் குறித்து அப்பகுதி போலீஸ் அதிகாரி ராஜீவ் ராவுத்தன் கூறுகையில், “அந்த இளைஞனுடன் பெண் ஓட்டம் பிடித்துள்ளார்.

அப்போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ

தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…

3 hours ago

சாதி, மதம் பார்த்து தலைவர்களை தேர்வு செய்யக்கூடாது : திருச்சி எம்பி துரை வைகோ பரபரப்பு பேச்சு!

மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…

3 hours ago

இயக்குநர் பாலா பேச்சை கேட்டு ஏமாந்துட்டேன்.. சினிமாவில் இருந்து விலகுகிறேன் : இளம் நடிகர் ஆதங்கம்!

இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…

4 hours ago

ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?

சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…

4 hours ago

தவெகவை விட பலத்தை காட்ட வேண்டும்… பரபரப்பை கிளப்பிய அதிமுக மூத்த தலைவர்!

திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…

4 hours ago

என்ன இப்படி சண்டப்போட்டுக்குறாங்க- தக் லைஃப் படத்தில் இருந்து திடீரென லீக் ஆன காட்சி?

கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…

5 hours ago

This website uses cookies.