முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு கொலை மிரட்டல் : காவல்நிலையத்தில் பரபரப்பு புகார்!!
புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து அண்மையில் ராஜினாமா செய்துள்ள சந்திர பிரியங்கா, கணவர் தன்னை மிரட்டுவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்த சந்திர பிரியங்கா ஜாதி, பாலின ரீதியில் தாக்குதலுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அந்த குற்றச்சாட்டு கடும் விவாதத்தை கிளப்பிய நிலையில் இவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் தொடர்பில் உள்ளதால் அவரது கணவரை பிரிந்து வாழ்ந்ததாக கூறப்பட்டது. அதனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபோது அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்ததாக அப்போது தகவல் பரவியது.
இந்த நிலையில் சந்திர பிரியங்கா கணவர் தன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புதுச்சேரி டிஜிபியை நேற்று சந்தித்து அவர் கொடுத்துள்ள புகாரில் ’கொலை செய்து விடுவதாக மிரட்டிவரும் தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தன் மீது அவர் அவதூறு பரப்புவதை நிறுத்த வேண்டும்’ என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
This website uses cookies.