டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை இடிந்து விழுந்ததில் கார்கள் சேதமடைந்தது. இந்நிலையில், மூன்று பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
டெல்லியில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் டெல்லி விமான நிலையத்தில் (Indira Gandhi International Airport) டி-1 டெர்மினல் ஒன்றில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் மேற்கூரையில் இருந்த ராட்சத கம்பி இடிந்து அவ்வழியாக சென்று கொண்டிருந்த கார்களின் மீது விழுந்தது. இதனால், அங்கிருந்த கார்கள் அப்பளம் போல் நொறுங்கியது.இது தொடர்பாக, தகவலறிந்து விரைந்து வந்த டெல்லி தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புப் படையினர் காருக்குள் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.
இந்த பயங்கர விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் தற்போது பலியாகி உள்ளனர்.இந்த ம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் பயணிகள் அவதியுற்று வருகின்றனர். இந்த விமான நிலையத்தை கடந்த மார்ச் மாதத்தில் தான் பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.