இந்தியா

இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்த அனுமதி.. டெல்லி நீதிமன்றம் விநோத தீர்ப்பு!

உயிரிழந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பெற்றோருக்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க தம்பதியின் மகன் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு Non-Hodgking’s Lymphoma என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவரது இனப்பெருக்க காலம் கருதி, அவரது விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது மகன் அதே ஆண்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர், தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இறந்த ஒருவரின் விந்தணுக்களைப் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு சட்ட விதிகளும் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை எனக் கூறிய நீதிபதி பிரதிபா சிங், 2002ஆம் ஆண்டு இஸ்ரேலிய வழக்கில் வாடகைத்தாய் மூலம் இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்ததை சுட்டிக் காட்டினார்.

எனவே, இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்த அவரது பெற்றோருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை முறைப்படி பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது இந்திய அரசியல் சாசன வரலாற்றில் முக்கிய, புதுமையான தீர்ப்பாக அமைந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

12 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

12 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

13 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

13 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

13 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

13 hours ago

This website uses cookies.