இந்தியா

இறந்த மகனின் விந்தணுக்களை பயன்படுத்த அனுமதி.. டெல்லி நீதிமன்றம் விநோத தீர்ப்பு!

உயிரிழந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற பெற்றோருக்கு அனுமதி அளித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த ஒரு 60 வயது மதிக்கத்தக்க தம்பதியின் மகன் ப்ரீத் இந்தர் சிங். 30 வயதான இவர், கடந்த 2020ஆம் ஆண்டு Non-Hodgking’s Lymphoma என்ற நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது, அவரது இனப்பெருக்க காலம் கருதி, அவரது விந்தணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அவரது மகன் அதே ஆண்டில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பின்னர், தனது மகனின் சேமிக்கப்பட்ட விந்தணுக்களை மருத்துவமனை நிர்வாகத்திடம் பெற்றோர் கேட்டுள்ளனர். அதற்கு தர முடியாது என மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. எனவே, இது தொடர்பாக அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இறந்த ஒருவரின் விந்தணுக்களைப் பயன்படுத்துவது குறித்து எந்தவொரு சட்ட விதிகளும் அரசியல் சாசனத்தில் இடம் பெறவில்லை எனக் கூறிய நீதிபதி பிரதிபா சிங், 2002ஆம் ஆண்டு இஸ்ரேலிய வழக்கில் வாடகைத்தாய் மூலம் இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்தி குழந்தை பெறுவதற்கு அனுமதி அளித்ததை சுட்டிக் காட்டினார்.

எனவே, இறந்த மகனின் விந்தணுக்களைப் பயன்படுத்த அவரது பெற்றோருக்கு அனுமதி அளித்த நீதிமன்றம், பதப்படுத்தப்பட்ட விந்தணுக்களை முறைப்படி பெற்றோரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளது. இந்த தீர்ப்பு தற்போது இந்திய அரசியல் சாசன வரலாற்றில் முக்கிய, புதுமையான தீர்ப்பாக அமைந்துள்ளது.

Hariharasudhan R

Recent Posts

மனைவிக்கு அறிமுகமான நபர்.. கணவரும் சேர்ந்து செய்த செயல்.. சென்னையில் பரபரப்பு சம்பவம்!

சென்னையில், ஐடி தம்பதியிடம் முதலீடு செய்வதாக ஏமாற்றி ரூ.65 லட்சம் அளவில் மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.…

9 hours ago

தோல்வியில் இருந்து உதித்து எழப்போகும் கங்குவா இயக்குனர்? அடுத்த படத்துக்கு ரெடி ஆகும் சிறுத்தை சிவா! அதுவும் இந்த நடிகர் கூட?

படுதோல்வி சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த “கங்குவா” திரைப்படம் சூர்யாவின் கெரியரில் மிகவும் மோசமான வரவேற்பை பெற்ற…

9 hours ago

2 மாதங்களாக கோவை சிறையில் விலகாத மர்மம்.. போலீசார் முக்கிய நகர்வின் பின்னணி!

கோவை மத்திய சிறையில் கைதி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து 2 மாதங்களாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர்:…

10 hours ago

தனுஷிற்கு எதிராக அறிக்கை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்! மேலிடத்தில் இருந்த வந்த உத்தரவு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…

தனுஷுக்கு எதிராக அறிக்கை தனுஷ் தற்போது “இட்லி கடை” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இத்திரைப்படம் வருகிற ஏப்ரல்…

10 hours ago

Uff… அந்த இடுப்பு இருக்கே : படுகிளாமரில் கீர்த்தி சுரேஷ்!

Uff keerthy 🥵😋 #KeerthySuresh pic.twitter.com/uAXJGCszlK— ActressFanWorld (@ActressFanWorld) March 31, 2025 Keerthy Bum 🤩😍🔥 what a…

11 hours ago

புதிய தமிழக பாஜக தலைவர்.. மூத்த பிரமுகர் கொடுத்த Hint.. பரபரக்கும் தலைமை!

ஏற்கனவே தலைவராக இருந்தவர் கூட மீண்டும் தமிழக பாஜக தலைவர் ஆகலாம் என மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.…

11 hours ago

This website uses cookies.