டெல்லி: டெல்லியில் பட்டாசுக்கு இந்த ஆண்டில் அனைத்து வகையில் தடை உள்ளபோதும் காற்று தர குறியீடு மோசம் என்ற அவல நிலையே இருந்து வருகிறது.
காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லியில் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் வெடிப்பதற்கு இந்த ஆண்டு டெல்லியில் அரசு தடை விதித்து உள்ளது.
இந்த பட்டாசு தடையை மீறுபவர்களுக்கு அபராதமும், சிறை தண்டனையும் கூட விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு உச்சகட்ட நடவடிக்கைகக்கு பின்னரும், டெல்லியில் உள்ள மக்கள் இன்று காலை எழுந்ததும், புகையும், பனியும் படர்ந்த காற்று மாசுபாட்டுடன் கூடிய நகரையே பார்க்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த டெல்லியில், காற்று தர குறியீடு மோசம் (276) என்ற அளவிலேயே இன்று உள்ளது. குறிப்பாக, டெல்லி பல்கலைக்கழக பகுதிகள் மற்றும் லோதி சாலை பகுதிகள் மிக மோசம் என்ற அளவில் முறையே 319 மற்றும் 314 என உள்ளன.
டெல்லி விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மதுரா சாலையில் 290 மற்றும் 245 என்ற அளவில் மோசமடைந்து உள்ளன.
டெல்லியை சுற்றிய பஞ்சாப், உத்தர பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தானில் வேளாண் கழிவுகளை தீ வைத்து எரிப்பதும் காற்று தர குறியீடு மோசமடைந்து காணப்படுவதற்கான காரணிகளாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
என்னை கடவுள் எனச் சொல்லி கடவுளை தாழ்த்திவிட வேண்டாம் என்றும், நான் சாதாரண மனிதன்தான் என்றும் இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.…
This website uses cookies.