மாநிலங்களவையில் உப்புமா கதையை சொன்ன திமுக எம்பி.. வாய் விட்டு சிரித்த எம்பிக்கள் :அடக்கி வாசித்த சபாநாயகர்..!!

நாடாளுமன்ற இருஅவைகளிலும் அதானி குழுமம் தொடர்பான விவகாரங்களால் அமளியில் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

இன்று நாடாளுமன்ற அவை தொடங்கியதும் அவையில் அதானி பங்கு சந்தை சரிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பியதால், இரண்டு அவையும் சில நிமிடங்கள் முடங்கியது.

அதானி பங்கு சரி ஹிண்டர்ன்பெர்க் வைத்த புகார்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பப்பட்டது. அமளிக்கு பின் அவையில் பேசிய திமுக எம்பி திருச்சி சிவா உப்புமா கதை ஒன்றை குறிப்பிட்டு பாஜகவை விமர்சனம் செய்தார்.

அவர் தனது பேச்சில், ஒரு கல்லூரியில் உள்ள ஹாஸ்டலில் தினமும் உப்புமா போடுகிறார்கள். உடனே மாணவர்கள் எல்லாம் கொதித்து போய் வார்டனிடம் முறையிடுகிறார்கள், எங்களுக்கு தினமும் உப்புமா வேண்டாம் என்று முறையிடுகிறார்கள்.

உடனே வார்டன்.. சரி ஒரு வாக்கெடுப்பு நடத்தலாம். நான் ஒரு லிஸ்ட் போடுகிறேன். அந்த லிஸ்டில் உங்களுக்கு பிடித்தமான பொருட்களுக்கு வாக்களியுங்கள். அதில் வெற்றிபெறும் பொருளை தேர்வு செய்யலாம். அந்த பொருளை ஹாஸ்டலில் கொடுக்க சொல்கிறேன் என்று கூறுகிறார்.

இதையடுத்து வாக்கெடுப்பு நடக்கிறது. இதில் 7 சதவிகிதம் மாணவர்கள் பிரெட் மற்றும் ஆம்லெட் வழங்க வாக்களிக்கிறார். 13 சதவிகிதம் பூரி வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். 18 சதவிகிதம் பேர் ஆளு பரோட்டா வழங்க கோரிக்கை வைக்கிறார்கள். 19 சதவிகிதம் மசாலா தோசை வேண்டும் என்று வாக்களிக்கிறார்கள். 20 பேர் இட்லி வேண்டும் என்று கேட்கிறார்கள். 23 சதவிகிதம் பேர் உப்புமா வேண்டும் என்று மீண்டும் வாக்களிக்கிறார்கள். இதனால் உப்புமா ஜெயித்துவிடுகிறது. அதனால் மீண்டும் உப்புமாவை போடலாம் என்று முடிவு எடுக்கிறார்கள் என்று திருச்சி சிவா கூறினார்.

இந்த கதையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூர்ந்து கவனித்து வந்தனர். என்ன சொல்ல வருகிறார் என்பது போல கூர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தனர்.

மாநிலங்களவை சபாநாயகர் தன்கரும் இதை உற்று கவனித்துக்கொண்டு இருந்தார். உப்புமா கதை என்றதும் சிலர் சிரித்தபடி கேட்டுக்கொண்டு இருந்தனர்.

தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, இது போலத்தான்.. உப்புமா வென்றது போலத்தான் 2019ல் பாஜகவும் வென்றது. மாணவர்கள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் உப்புமா வென்றது போல எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் பாஜக வென்றது.

அது அடுத்த தேர்தலில் நடக்காது. எதிர்க்கட்சிகள் ஒன்று இணைய வேண்டும் என்று எங்கள் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்து வருகிறார். அது நடக்க வேண்டும். அப்போதுதான் பாஜக வெல்வதை தடுக்க முடியும். நாங்கள் கை கோர்த்து வருகிறோம்.

இந்த ஆட்சி மூலம் நடந்தது எல்லாம் போதும். மக்கள் பட்ட கஷ்டங்கள் போது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்டது போதும். சமூக நீதிக்கு எதிரான இந்த ஆட்சி போதும். மத உரிமைகளுக்கு எதிரான இந்த ஆட்சி போதும்.

தமிழுக்கு எதுவும் செய்யாமல் இவர்கள் இல்லாத சமஸ்கிருதம் மொழிக்காக உழைக்கிறார்கள். அதற்கு பணம் கொடுக்கிறார்கள். மாநில உரிமைகளை இவர்கள் முற்றாக குழி தோண்டி புதைத்துவிட்டனர். இப்படிப்பட்ட ஆட்சி போதும். இந்த ஆட்சிக்கு முடிவுரை எழுதும் நேரம் வந்துவிட்டது.

இதோடு இந்த ஆட்சிக்கு எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து முடிவு கட்டும், என்று திருச்சி சிவா பேசினார். உப்புமா கதையை எடுத்துக்காட்டாக கூறி அவர் பாஜக ஆட்சியை விமர்சனம் செய்தது நாடாளுமன்றத்தில் கவனம் பெற்றது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விடாமுயற்சி வசூலை விரட்டி முறியடித்த டிராகன்.. வெறும் 5 நாட்களில்..!!

கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…

5 hours ago

எங்க கூட்டணிக்கு வந்தால் விஜய் வெற்றி பெற முடியும்.. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் கணிப்பு!

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…

6 hours ago

ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரை வந்த சிவனடியார்கள் : ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு!

ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…

6 hours ago

போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க வந்த பெண் மானபங்கம்.. நீதிபதி அதிரடி தீர்ப்பு!!

திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…

7 hours ago

திடீரென ரஜினி கொடுத்த பரிசு.. ஆச்சரியத்தில் ஆடிப்போன இயக்குநர்..!!

இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…

7 hours ago

அடுத்தடுத்து மாயமான இளைஞர்கள் கொன்று புதைப்பு.. வெளியான பகீர் தகவல்!

கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…

8 hours ago

This website uses cookies.