மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த 2 எம்பிக்கள் யார் தெரியுமா? பரபர பின்னணி!!!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்த 2 எம்பிக்கள் யார்? பரபர பின்னணி!!!

மக்களவை, மாநில சட்டப் பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் ‘நாரி சக்தி வந்தன் மசோதா’ மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் கூட்டத்தொடரின் முதல் நாளில், மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று லோக்சபாவில் விவாதிக்கப்பட்டது. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களும் இந்த மசோதாவுக்கு ஆதரவு அளித்துப் பேசினர். இதையடுத்து, இந்த மசோதா வாக்குப்பதிவுக்கு விடப்பட்ட நிலையில், அவையில் இருந்த 454 எம்.பிக்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 2 எம்.பிக்கள் மட்டுமே இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

இன்று இந்த மசோதா வாக்கெடுப்பு நடைபெற்றபோது நாடாளுமன்ற மக்களவை நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த எம்.பி.க்களில் 2 பேர் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.

ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் மற்றொரு எம்.பி.யும் மட்டுமே மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர். அகில இந்திய மஜ்லீஸ் இத்திகாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி, இந்த மசோதாவுக்கு ஒரு திருத்தத்தை முன்வைத்து, அதன் மீது பிரிவு வாக்கெடுப்பைக் கோரினார்.

ஆனால் அவரது கோரிக்கை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. இதையடுத்து அவர், மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார். மற்றொரு எம்.பியான இம்தியாஸ் ஜலீலும் இந்த மசோதாவுக்கு எதிராக வாக்களித்துள்ளார்.

அசாதுதீன் ஒவைசி இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசுகையில், “இந்த மசோதா முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது. மோடி அரசு ‘சவரனா’ பெண்களுக்கு மட்டுமே பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க விரும்புகிறது. இது ஒரு ஓபிசி எதிர்ப்பு மற்றும் முஸ்லீம் எதிர்ப்பு மசோதா. மக்கள்தொகையில் 7% முஸ்லிம் பெண்கள். ஆனால் இந்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளனர்.” என்று விமர்சித்தார்.

எனினும், 3ல் 2 பங்கு ஓட்டுக்கு மேல் மசோதாவுக்கு ஆதரவாகப் பதிவானதையடுத்து, மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதா தான் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதலில் நிறைவேற்றப்பட்ட மசோதா என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் 33 சதவீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, தொகுதி மறுவரையறை முடிந்த பின்னரே இந்த மசோதா அமலுக்கு வர உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அயோக்கியத்தனம்.. இதுதான் போலீஸ் ஸ்டேஷன் லட்சணமா? போனில் வெளுத்து வாங்கிய டிஐஜி வருண்குமார்!

அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…

17 minutes ago

AK 64- திரும்பவும் ஆதிக் ரவிச்சந்திரனோடயா? குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற Hint!

ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…

30 minutes ago

உச்சக்கட்ட சந்தோஷத்தில் அஜித்… திக்குமுக்காடிய ஆதிக் : GBU கொடுத்த சர்ப்ரைஸ்!

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் இன்று வெளியானது. ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளதால் ரசிகர்கள்…

40 minutes ago

என்னைய தவிர எல்லாத்துக்கும் நேஷனல் அவார்டு- வெற்றிமாறனுக்கு சங்கடத்தை ஏற்படுத்திய நடிகை…

தேசிய விருதுகளை குவித்த திரைப்படம்… வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “ஆடுகளம்”. மிகவும்…

2 hours ago

என் மேல நம்பிக்கை வச்சதுக்கு மிக்க நன்றி அஜித் சார்- அர்ஜுன் தாஸ் உருக்கம்

வெளியானது குட் பேட் அக்லி… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று உலகம்…

2 hours ago

‘இனி நம்மல யாருமே பிரிக்க முடியாது’.. தண்டவாளத்தில் கட்டி அணைத்தவாறு தற்கொலை செய்த காதல் தம்பதி!

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே உள்ள பட்டியூர் பகுதியில் இருக்கும் சென்னை டு பெங்களூர் ரயில்வே தண்டவாளத்தின் அருகே உள்ள…

3 hours ago

This website uses cookies.