தெலுங்கானா : காதலை ஏற்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் குத்தி படுகாயப்படுத்திய இளைஞரை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் நலகொண்டாவை சேர்ந்த வாலிபர் ரோகித். அதே பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவனுடன் ரோகித் நட்பாக பழகி வந்தான்.
இந்த நிலையில் அந்தப் பெண் மீது ரோகித்திற்கு காதல் ஏற்பட்டது. தன்னுடைய காதலை ரோகித் பலமுறை அந்த பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம் பெண் ரோகித் காதலை ஏற்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மதியம் தன்னுடைய நண்பர் ஒருவர் மூலம் அந்த இளம் பெண்ணை அங்குள்ள ராம்நகர் பார்க் பகுதிக்கு வரவழைத்தான் ரோகித்.
அங்கு அந்த இளம் பெண்ணுடன் அவன் பேசி கொண்டிருந்தான். அப்போது தனது நண்பரிடம் நான் இந்த பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமென்று அழைத்து சென்றான் ரோகித்.
அப்போது தான் ஏற்கனவே திட்டமிடப்படி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த இளம் பெண்ணின் கை, கால், முதுகு ஆகிய இடங்களில் குத்தினான்.
இதனால் மயங்கி சரிந்த அந்த பெண் துடிதுடித்து கொண்டிருந்த நிலையில் அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ரோகித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நினைத்ததை முடிப்பவர் அஜித்குமார் தமிழ் சினிமாவில் ஒரு டாப் நடிகராக வலம் வந்தாலும் அவருக்கு பைக் ஓட்டுவதிலும் கார் பந்தயங்களிலும்…
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இந்தி திணிப்பு , நிதி பகிர்வில் பாரபட்சம் , தொகுதி மறுசீரமைப்பில் அநீதி போன்றவற்றை…
போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் எக்ஸைஸ் அதிகாரிகள் கொச்சியில் கோஷ்ரீ பாலம் அருகே நடத்திய சோதனையில் மலையாள சினிமா…
இவ்வளவு இழுபறியா? கடந்த 2022 ஆம் ஆண்டு முதலே வெற்றிமாறனின் “வாடிவாசல்” திரைப்படத்தை குறித்தான பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. மூன்று…
நடிகை மௌனிகா, சில படங்களில் நடித்த அவர் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். அவர் மறைந்த இயக்குநர் பாலுமகேந்திராவின் இரண்டாவது…
தாறுமாறு கலெக்சன் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.