உங்க தொப்பியில் உள்ள மூன்று சிங்கங்களுக்கு அர்த்தம் தெரியுமா? காவல்துறையிடம் முன்னாள் முதல்வர் ஆவேசம்!

ஆந்திரா சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலரை தெலுங்கு தேசம் கட்சியினர் படுகொலை செய்த நிலையில் மேலும் சிலரை பயங்கரமாக தாக்கிய தெலுங்கு தேச கட்சியினர் அவர்களை படுகாயம் அடைய செய்துவிட்டனர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் தெலுங்கு தேசம் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து நூற்றுக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.

எனவே ஆந்திராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.

இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருப்பு துண்டு அணிந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சி எம்எல்ஏக்கள் வந்தனர்.

மேலும் அவர்களுடைய கைகளில் ஆளும் கட்சி மற்றும் ஆந்திர மாநில அரசு ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.

சட்டமன்ற நுழைவாயிலில் பணியில் இருந்த போலீசார் அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினார்.

அப்போது போலீஸ் அதிகாரியான மதுசூதன் ராவ் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை பறித்து கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி அவரை பார்த்த மதுசூதன் ராவ், நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நாம் மக்களாட்சியில் இருக்கிறோம்.

உன் தலையில் நீ அணிந்திருக்கும் தொப்பியில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சிங்களுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? அதன் அர்த்தம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது அல்ல, பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவே அந்த சின்னம் உன்னுடைய தொப்பியில் பொருத்தப்பட்டுள்ளது என்று பயங்கர ஆவேசமாக கூறினார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

7 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

7 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

7 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

7 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

8 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

8 hours ago

This website uses cookies.