ஆந்திரா சட்டமன்ற கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் சிலரை தெலுங்கு தேசம் கட்சியினர் படுகொலை செய்த நிலையில் மேலும் சிலரை பயங்கரமாக தாக்கிய தெலுங்கு தேச கட்சியினர் அவர்களை படுகாயம் அடைய செய்துவிட்டனர் என்று ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் தெலுங்கு தேசம் கட்சியினரின் அராஜகத்திற்கு பயந்து நூற்றுக்கணக்கான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர் என்றும் அவர் குற்றம் சாட்டுகிறார்.
எனவே ஆந்திராவில் உடனடியாக ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பது அவருடைய கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் இன்று சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கருப்பு துண்டு அணிந்து ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் அவருடைய கட்சி எம்எல்ஏக்கள் வந்தனர்.
மேலும் அவர்களுடைய கைகளில் ஆளும் கட்சி மற்றும் ஆந்திர மாநில அரசு ஆகியவற்றிற்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளையும் வைத்திருந்தனர்.
சட்டமன்ற நுழைவாயிலில் பணியில் இருந்த போலீசார் அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்று கூறி அவர்களை தடுத்து நிறுத்தினார்.
அப்போது போலீஸ் அதிகாரியான மதுசூதன் ராவ் என்பவர் சட்டமன்ற உறுப்பினர்கள் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை பறித்து கிழித்து எரிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த ஜெகன்மோகன் ரெட்டி அவரை பார்த்த மதுசூதன் ராவ், நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் நாம் மக்களாட்சியில் இருக்கிறோம்.
உன் தலையில் நீ அணிந்திருக்கும் தொப்பியில் பொருத்தப்பட்டிருக்கும் மூன்று சிங்களுக்கு அர்த்தம் தெரியுமா உனக்கு? அதன் அர்த்தம் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சல்யூட் அடிக்க வேண்டும் என்பது அல்ல, பொதுமக்களை காப்பாற்ற வேண்டும் என்பதை நினைவூட்டவே அந்த சின்னம் உன்னுடைய தொப்பியில் பொருத்தப்பட்டுள்ளது என்று பயங்கர ஆவேசமாக கூறினார்.
சிஎஸ்கே அணிக்காக இந்தியா வந்து விளையாடி வருகிறார் பத்திரனா. சென்னை அணியில் முக்கிய வீரராக இருக்கும் பத்திரனா கடந்த சீசனில்…
சீன மகிழுந்து நிறுவனத்தின் ரூ.85 ஆயிரம் கோடி முதலீட்டை தமிழ்நாடு இழந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். விழுப்புரம்:…
சிக்கந்தரின் நிலைமை? கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள திரைப்படம்…
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
This website uses cookies.