முதலமைச்சர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் நீக்கம் ஏன் தெரியுமா….? குட்டி ஸ்டோரி கூறிய ராகுல்…

Author: kavin kumar
17 February 2022, 10:41 pm

பஞ்சாப் முதலமைச்சர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அமரீந்தர் சிங் பதவி விலகினார்.அதையடுத்து, பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார் கேப்டன் அமரீந்தர் சிங். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார் கேப்டன் அமரீந்தர் சிங்.பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது.

பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறிவித்தார் ராகுல் காந்தி. இதனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து அதிருப்தியடைந்தார்.இந்நிலையில், பஞ்சாப் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில், பஞ்சாபின் பதேகர் சாஹிப்பில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர் சிங் ஏன் நீக்கப்பட்டார் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். ஏழை மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க ஒப்புக் கொள்ளாததால் தான் அவர் நீக்கப்பட்டார். மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுடன் தனக்கு ஒப்பந்தம் உள்ளதாக அவர் கூறினார்.
போதைப்பொருள் நாட்டுக்கு அச்சுறுத்தல் என்று நான் தொடர்ந்து கூறினேன். நான் இதை மீண்டும் சொல்கிறேன், பஞ்சாப் பரிசோதனை செய்ய வேண்டிய மாநிலம் அல்ல. போதைப்பொருள் இளைஞர்களின் வாழ்க்கையை அழித்துக்கொண்டால் பஞ்சாபில் வளர்ச்சியும் வளர்ச்சியும் அர்த்தமற்றதாகிவிடும்.இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!